செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த தடை கோரிய வழக்கு தள்ளுபடி
சென்னை,பிப்.2- கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த தடை கோரிய வழக்கு, திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், தாக்கல் செய்த மனுவில், கொரோனா தொற்று மூன்றாவது அலை பரவல் காரணமாக கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எனவும், இறுதி செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தப்படும் எனவும் தமிழக உயர்கல்வித் துறை செயலாளர் கடந்த மாதம் 21 ஆம் தேதி அறிவித்திருந்தார். செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்துவதால் மாணவர் களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதுடன், கல்வி நிறுவனங்களின் நம்பகத்தன்மையும் பாதிக்கப்படும். எனவே ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக் கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
நிரந்தரப்பதிவு கணக்கு: டி.என்.பி.எஸ்.சி புதிய தகவல்
சென்னை, பிப். 2- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணைய இணையதளத்தில் நிரந்தரப் பதிவு கணக்கு (ஓடிஆர்) வைத்திருக்கும் அனைத்து தேர்வர்களும் தங்களது ஆதார் விவரங்களை இணைத்திடுமாறு அறிவுறுத் தப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலத்திற்கேற்ப தேவை யான மாற்றங்களை அறிமுகம் செய்து அவற்றை நடைமுறைபடுத்தி வருகிறது. மேலும், தெரிவு முறைகளில் வெளிப் படைத் தன்மை மற்றும் நம்பகத் தன்மையை அதிகரிக்கும் பொருட்டு, போட்டித் தேர்வு களை விரைவாக நிறைவு செய்யும் வகையி லும், அவ்வப்போது சீர்திருத்தங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது, தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இணையத்தில் ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வாளர்களும் தங்களது ஆதார் குறித்த விவரங்களை 28.02.2022 ஆம் தேதிக்குள் தவறாமல் இணைத்து, எதிர்காலத்தில் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் அறிக்கைகளின் அடிப்படையில் தனது ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்கு மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேங்காய், பருப்பு விலை உயர்வு
நாமக்கல்,பிப்.2- நாமக்கல் விற்பனை குழுவில் உள்ள பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கடந்த வாரம் 1492 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.24.20-க்கும், குறைந்த பட்சமாக ரூ17.00 -க்கும், சராசரியாக ரூ.21-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.30 ஆயிரத்து 433-க்கு வர்த்தகம் நடை பெற்றது. இந்த நிலையில், செவ்வாயன்று (பிப்.1) ஏலத்திற்கு 2114 கிலோ தேங்காய் கொண்டுவரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்றுரூ.28.00-க்கும், குறைந்தபட்சமாக ரூ.25.25-க்கும், சராசரியாக ரூ.26-க்கும் ஏலம் போனது மொத்தம் ரூ.56 ஆயிரத்து769 -க்கு வர்த்தகம் நடைபெற்றது.
ஜி.கே.வாசனுக்கு கொரோனா தொற்று
சென்னை,பிப்.2- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனுக்கு கொரோனா தொற்று உறுதி யாகி இருக்கிறது. இதுதொடர்பாக அவர் வெளியிட்டியிருக்கும் அறிக்கை யில்,“ எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டேன். பரிசோதனையின் முடிவில் எனக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது தெரியவந்தது. எனவே மருத்துவரின் ஆலோசனைப் படி, நோய்த்தொற்றில் இருந்து குண மாகும் வரை என்னை தனிமைப்படுத் திக்கொள்கிறேன்” என்று தெரிவித் திருக்கிறார்.