கோரிக்கை அட்டையுடன் பணியாற்றிய தொகுப்பூதிய செவிலியர்கள்
உலக செவிலியர் தினம்
சென்னை, மே 12 - உலக செவிலியர் தினமான திங்க ளன்று (மே 12) மாநிலம் முழுவதும் செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி கோரிக்கை அட்டை அணிந்து பணி யாற்றினர். மருத்துவ பணியாளர் தேர்வு வாரி யத்தின் (எம்ஆர்பி) போட்டி தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்ட சுமார் 15 ஆயிரம் செவிலியர்கள் 18 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அரசு மருத்துவமனை கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்க ளில் பணியாற்றும் இவர்கள் 2 வருடத் திற்கு பிறகு பணி நிரந்தரம் செய்யப்படு வர் என்று அரசு அறிவித்தது. 8 வரு டங்கள் கடந்தும் சுமார் 8 ஆயிரம் செவி லியர்கள் நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். தமிழ்நாடு அரசு, அனைத்து தொகுப் பூதிய செவிலியர்களையும் பணி நிரந்த ரம் செய்ய வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி எம்.ஆர்.பி தொகுப் பூதிய செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். எம்.ஆர்.பி தொகுப்பூதிய செவிலியர் களுக்கும் ஊதியத்துடன்கூடிய மகப் பேறு விடுப்பு வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரந்தர செவிலியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். கொரோனா காலக் கட்டத்தில் பணி யாற்றியவர்களில் பணிநீக்கம் செய்யப் பட்ட செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் இந்த போராட்டத்தை நடத்தியது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் நெ.சுபின் கூறுகையில், “கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்வதுடன் முதலமைச்சருக்கு கோ ரிக்கை அஞ்சலட்டை அனுப்பும் இயக்க மும் நடைபெற்றது. இதன் தொடர்ச்சி யாக மே 20 அன்று அகில இந்திய பொது வேலைநிறுத்தத்திலும் பங்கேற்போம். ஜூன் 26 அன்று சென்னையில் 24 மணி நேர தர்ணா போராட்டமும், ஜூலை மாதத்தில் எம்ஆர்பி அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டமும் நடத்தப்படும்” என்றார்.