சென்னை, டிச. 30- கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு 10,335 ரூபாயை ஒன்றிய அரசு அறிவித் துள்ளது. தமிழ்நாட்டில் 20 ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள் மூலம் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வரு கிறது. அவை கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனை மலை, கிணத்துக்கடவு, நெகமம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூதப்பாடி, அந்தியூர், அவல்பூந் துறை, கோபிச்செட்டிப்பாளை யம், கொடுமுடி, சத்தியமங்கலம், எழுமாத்தூர், வெப்பிலி, நாமக் கல் மாவட்டத்திலுள்ள ராசி புரம், பரமத்தி வேலூர், திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலைப் பேட்டை, பெதப்பம்பட்டி, காங்கேயம், வெள்ளக்கோயில், மூலனூர், முத்தூர், மதுரை மாவட்டத்திலுள்ள த.வாடிப்பட்டி ஆகும்.
மேலும், இ-நாம் திட்டத்தின் மூலம் 13 ஒழுங்குமுறை விற்ப னைக் கூடங்களில் (ஆனைமலை, ஒட்டன்சத்திரம், அந்தியூர், கோபி செட்டிபாளையம், சத்தியமங்க லம், உசிலம்பட்டி, பரமத்தி வேலூர், தேனி, பெதப்பம்பட்டி, உடுமலைப்பேட்டை, வெள்ளக் கோயில், குடியாத்தம் மற்றும் ராஜபாளையம்) மின்னணு பரிவர்த்தனை செய்யப்பட்டு வரு கிறது. இந்த ஒழுங்குமுறை விற் பனைக் கூடங்களில் கொப்பரை தேங்காயை காய வைப்பதற் கான உலர்கள வசதியும், தேங் காயை தேங்காய் பருப்பாக மாற்று வதற்கு உலர்த்தும் இயந்திர வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விலை வீழ்ச்சி காலங் களில் விவசாயிகள் தேங்காய் பருப்பு மூட்டைகளை ஒழுங்கு முறை விற்பனைக்கூட கிட்டங்கி களில் இருப்பு வைத்து 5 சதவிகித வட்டியில் 6 மாதங்கள் வரை அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை கடன் பெறும் வசதியும் உள்ளது. தேங்காய் பருப்புக்கு குவிண்டால் ஒன்றுக்கு 10,335 ரூபாய்க்கு குறைந்தபட்ச ஆதார விலையாக நிர்ணயிக்கப்பட் டுள்ள நிலையில் (கிலோ ஒன்றுக்கு ரூ.103.35) புதனன்று (டிச. 29) ஈரோடு மாவட்டம் பூதப் பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு 104.76 ரூபாய்க்கு பரிவர்த்தனை செய்யப்பட் டுள்ளது. எனவே, தென்னை விவசாயி கள் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையில் உள்ள ஒழுங்குமுறை விற்ப னைக் கூடங்களை அணுகி பயன் பெறுமாறு வேளாண்துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இது தொடர்பான விவரங்க ளுக்கு வேளாண்மை துணை இயக்குநர் கைபேசி எண் 9445657993-ஐ தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட் டுள்ளது.