tamilnadu

நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது

புதுதில்லி,பிப்.17- தமிழ்நாட்டில் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பொட்டி புரம் கிராமத்தின் அருகே உள்ள அம்பரப்பர் மலையை குடைந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள ஒன்றிய  அரசு நடவடிக்கை மேற்கொண்டது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று கூறி இதை எதிர்த்து ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் சார்பில் தில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. தேசிய பசுமை தீர்ப்பா யம் தேசிய வனவிலங்குகள் வாரியத்தின் அனுமதியை பெற்ற பிறகே இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு  செய்யப்பட்டது.  இந்த மனுவின் மீதான விசாரணை பிப்ரவரி 17 அன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கள் அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது  தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமை க்கும் திட்டத்தை அனுமதிக்க முடியாது. நியூ ட்ரினோ திட்டத்தைவிட மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாப்பே முக்கியம் என   தமிழக அரசு திட்டவட்டமாகதெரிவித்துள்ளது.