tamilnadu

img

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் 2022 - 23

ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா

 

தாவரவியல் பூங்காக்கள், பல்லுயிரினங்க ளின் இருப்பிடங்களா கவும், பொது மக்களுக்கான பொழுதுபோக்கு மையங்களாக வும் திகழ்கின்றன. இதனைக் கருத்தில் கொண்டு ‘லண்டன் க்யூ’ பூங்கா அமைப்புடன் இணைந்து சென்னைக்கு அருகில் தாவரவியல் பூங்கா ரூ. 300 கோடியில் அமைக்கப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை இவ்வாண்டு தயாரிக்கப்படும். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் இடர் தணிக்கும் திட்டங்கள் மற்றும் பசுமை யாக்கும் திட்டங்களுக்கு போதிய நிதி அளிக்கவும், “தமிழ்நாடு பசுமைக் காலநிலை மாற்ற நிதியத்தை” அரசு உருவாக்கும். இந்நிதியத்தின் மூலம், வளர்ச்சி நிதி நிறுவனங்கள், பன்னாட்டு காலநிலை மாற்ற நிதியங்கள் உள்ளிட்ட பல்வேறு  ஆதாரங்களிலிருந்து நிதி திரட்டப்படும். தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடு களைப் பாதுகாத்தல், அவற்றின் வாழ் விடத்தை விரிவுபடுத்துதல், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் “வரையாடு பாதுகாப்புத் திட்டம்” அரசு செயல்படுத்தும். இத்திட்டத்திற்கு, முதற்கட்டமாக ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

புலம் பெயர் தொழிலாளர்களுக்காக நடமாடும் உதவி மையங்கள்

தமிழ்நாட்டில் தொழில், பொருளாதார வளர்ச்சியின் காரணமாக, புலம் பெயர் தொழிலாளர்களின் தேவை அதிகரித்து வருகிறது. இத்தொழிலாளர்கள் பற்றி போதிய விவரங்கள் இல்லாமை கொரோனா தொற்றின்போது புலப்பட்டது. அரசின் நலத்திட்டங்களின் பயன்கள் அவர்களைச் சென்றடையவும், அவர்களின் சட்ட உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் முலம் புலம் பெயர் தொழிலாளர்களுக்கான நடமாடும் தகவல் மற்றும் உதவி மையங்கள் அறிமுகப்படுத்தப்படும். முதல் கட்டமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இந்த நடமாடும் தகவல் மற்றும் உதவி மையங்கள் செயல்படுத்தப்படும்.

கோவில்கள் புனரமைப்பு

தமிழர்களின் வரலாறு, பண்பாடு, கட்டிடக் கலை ஆகியவற்றின் விழுமியங்களின் சான்றாக, தொன்மையான கோவில்கள் தமிழகமெங்கும் பரவி உள்ளன. 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில்களை அவற்றின் பழமை மாறாமல் புதுப்பித்து, புனரமைத்து, பார் போற்றும் வண்ணம்  பணிகளை மேற்கொள்ள இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். இப்பணிகள் ரூ.100 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். சமண, பவுத்த மதங்களைச் சோர்ந்த புகழ் பெற்ற தலங்கள் தமிழ்நாட்டில் பரவலாக உள்ளன. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாககை, கரூர், மதுரை போன்ற மாவட்டங்களில் உள்ள இத்தலங்களைச் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க உலகத் தரத்தில் சுற்றுலா வசதிகள் தனியார் பங்களிப்புடன் ஏற்படுத்தப்படும்.

வள்ளலார் பல்லுயிர் காப்பகம்!

 

“வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பல்லுயிர் ஓம்பிய வள்ளலாரின் 200-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஆதரவில்லாத கைவிடப்பட்ட, காயமடைந்த வளர்ப்புப் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளைப் பராமரிக்கும் அரசுசாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு உதவியளிப்பதற்கு “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்” என்னும் புதிய திட்டம் இந்த நிதியாண்டில் தொடங்கப்படுகிறது. ரூ. 20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

எஸ்சி, எஸ்டி மாணவர்களின் உயர்கல்விக்கு ரூ.1,963 கோடி 

தமிழக சட்டப்பேரவையில் 2022-23 நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “விளிம்பு நிலையில் இருக்கும் இருளர்கள் போன்ற பண்டைய பழங்குடியினருக்கு இந்த ஆண்டு ரூ. 20.7 கோடியில் 443 வீடுகள் கட்டுவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. வரும் நிதியாண்டில் மேலும்,1000 புதிய வீடுகள் பண்டைய பழங்குடியினருக்கு ரூ. 50 கோடியில் கட்டித் தரப்படும். ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி உதவித்தொகைக்காக 1,963 கோடி ரூபாயும், உணவுக் கட்டணத்திற்கு ரூ. 512 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு 4,281.76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

 

அதிநவீன கணினி ஆய்வகங்கள்

 

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப,தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைக ளும்  இதரப் பள்ளிகளில் அதிநவீன கணினி ஆய்வகங்களும் உருவாக்கப்படும். அடுத்த  ஐந்து ஆண்டுகளில், இத்திட்டங்கள் படிப்படியாக 7,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்்படும். வரும் நிதியாண்டில் 1,300 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும். மாநிலத்தில் இயங்கி வரும் பொது நூலகங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்து, மேம்படுத்தத் தேவையான ஆலோசனைகள் வழங்க ஓர் உயர்மட்டக் குழுவை அரசு அமைத்துள்ளது. புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட ஆறு மாவட்டங்களில், 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உயர்தர வசதிகளுடன் கூடிய மாவட்ட மத்திய நூலகங்கள் அரசால் ஏற்படுத்தப்படும். இந்நூலகக் கட்டடங்களுக்கு தமிழ் அறிஞர்களின் பெயர்கள் சூட்டப்படும்.

 

நீதி நிர்வாகம்

 

வழக்குகளை விரைந்து முடித்து, தாமதமின்றி தீர்ப்புகளை வழங்கிட, நீதித்துறைக்கு அனைத்து ஆதரவையும் இந்த அரசு வழங்குகின்றது. வணிக வழக்குகளை விசாரிப்பதற்கென ஏழு வணிக நீதிமன்றங்கள் அமைத்திட, இந்த நிதியாண்டில் ஒப்புதல்அளிக்கப்பட்டுள்ளது. இம்மதிப்பீட்டில் நீதிநிருவாகத் துறைக்கென 1,461.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

 

 பயிர்க்கடன் தள்ளுபடி  

 

பயிர்க்கடன் தள்ளுபடிக்காக 2,531 கோடி ரூபாயும், நகைக்கடன் தள்ளுபடிக்காக 1,000 கோடி ரூபாயும், சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடிக்காக 600 கோடி ரூபாயும் என   மொத்தம் 4,131 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   இந்த நிதியாண்டில், இதுவரை 14,15,916 விவசாயிகளுக்கு 9,773 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 10,76,096 குறு, சிறு விவசாயிகளுக்கு 7,428 கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களும் அடங்கும். வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்த வரவு-செலவுத் திட்டத்தில் உணவு மானியமாக 7,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

உதயமாகிறது வன ஆணையம், நிலத்தடி நீரை மேம்படுத்த ரூ.2787 கோடி

 

 வள்ளலார் 200வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஆதரவில்லாத கைவிடப்பட்ட, காயமடைந்த வளர்ப்புப் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்கு களைப்பராமரிக்கும் அரசுசாரா நிறுவ னங்கள், சேவை நிறுவனங்களுக்கு உதவி யளிப்பதற்கு “வள்ளலார் பல்லுயிர் காப்ப கங்கள்” என்னும் புதிய திட்டம் வரும்  நிதியாண்டில்தொடங்கப்படும். இத்திட்டத் திற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. வனப் பாதுகாப்பு, பசுமைப் பரப்பை அதிகரித்தல், வன மேலாண்மையில் பழங்குடியினரை ஈடுபடுத்துதல், மனிதர்களுக்கும் வனவிலங்குக ளுக்கும் இடையேயான மோதல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள், வனத்துறை யில்திறன் மேம்பாடு குறித்த கொள்கை மாற்றங்கள் ஆகியவற்றை அரசிற்குப் பரிந்துரைக்க வன ஆணையம் ஒன்றை அரசு அமைக்கும். வனங்களுக்குப் பாதகமின்றி சுற்றுச்சூழல் சுற்றுலாவை ஊக்குவிப்பது அரசின் கொள்கை யாகும். இதன் அடிப்படையில், சேத்துமடை (கோயம்புத்தூர் மாவட்டம்), மணவணூர் மற்றும் தடியன் குடிசை (திண்டுக்கல் மாவட்டம்), ஏலகிரி (திருப்பத்தூர் மாவட்டம்) ஆகிய பகுதிகள் சூழல் சுற்றுலாத் தலங்களாக தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும். தங்கும் இடங்கள், வனங்களைப் பற்றிய விழிப்புணர்வு மையங்கள் போன்ற பல வசதிகள் இத்தலங்களில் ஏற்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் வரும் வருவாய் அப்பகுதியின் வளர்ச்சிக்காகச் செலவிடப்படும்.

பாசனம்

நடப்பாண்டில்,கால்வாய்கள், ஏரிகள், நீர்நிலை களையும் நீர் வழித்தடங்களையும் மறுசீரமைத்தல், தடுப்பணைகள், கதவணைகள், தரைகீழ் தடுப்பணை கள் போன்ற நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்பு களை ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. இதற்காக,  2,787 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3,384 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி வடிநிலப் பகுதியில் உள்ள பாசன அமைப்புகளில் நீட்டித்தல், புனரமைத்தல், நவீனமயமாக்குதல் போன்ற பணிகள் விரைவில்தொடங்கப்பட உள்ளன.

 

10 மாவட்டங்களில் முன்மாதிரி பள்ளிகள்

 

பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததன் காரணமாக, மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுசெய்யும் வகையில் “இல்லம் தேடிக் கல்வி” என்ற சிறப்பான முன்னோடிக் கல்வித் திட்டம் 38 மாவட்டங்களில் 1.8 லட்சம் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதன் வாயிலாக 30 இலட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.  இத்திட்டம்வரும் நிதியாண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இதற்காக, 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அரசுப் பள்ளி மாணவர்கள், புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் STEAM - அதாவது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் மருத்துவம் போன்ற பிரிவுகளில் சேர்ந்து, கல்வி பெற உதவும் நோக்கோடு, கல்வியில் பின்தங்கியுள்ள 10 மாவட்டங்களில்முன்மாதிரிப் பள்ளிகளை இந்த அரசு தொடங்கியுள்ளது. வரும் நிதியாண்டில்,மேலும் 15 மாவட்டங்களில் இத்தகைய முன்மாதிரிப்பள்ளிகள்  தொடங்கப்படும். 

 

சிறப்பம்சங்கள்

 

வருவாய் பற்றாக்குறை ரூ.7000 கோடியாக குறைவு

முதன்முறையாக இந்த ஆண்டு 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தமிழ்நாட்டில் வருவாய் பற்றாக்குறை குறைய உள்ளது. மேலும் இந்த சவாலான ஆண்டிலும் நிதிப்பற்றாக்குறை 4.6 1 விழுக்காட்டிலிருந்து 3.80 விழுக்காடாக உள்ளது.
தாமரைபரணி படுகையில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் பண்டைத் தமிழகத்தின் தொன்மை குறைந்தது 3200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என வெளிப்படுத்தி உள்ளன.

ஒன்றிய அரசு என்பதே சரியானது!

நமது அரசியல் முன்னோர்களான நீதிக்கட்சியின் காலத்திலிருந்தே சமூகநீதிக்கான அளவுகோல் திராவிட இயக்கத்திற்கான அடையாளமாக திகழ்ந்து வருகின்றன.
இந்திய மாநிலங்களின் ஒன்றியம் என்பதே நமது அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கோட்பாடாகும்

மீண்டும் எழுச்சி பெறுவோம்!

நமது பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெற சமூக நலத்திட்டங்களில் எவ்விதக் குறையுமின்றி, முன்னுரிமைகளை மறு பரிசீலித்து சமூக கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள் ஆகியவற்றின் மீது அதிக கவனம் செலுத்தப்படும்.
முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு இதுவரை 10,01,883 மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது.

ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு!

சரக்கு மற்றும் சேவை வரியை இழப்பீட்டை ஒன்றிய அரசு வழங்கும் கால வரையறை 30.6 .2022 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் வரும் நிதியாண்டில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி இழப்பை தமிழ்நாடு சந்திக்க நேரிடும்.
மாநில நிதிக் குழுவின் அறிக்கையின் மீது அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை விரைவில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்.

பெரியாரின் சிந்தனை தொகுப்பு!

தமிழ் மொழிக்கும் இந்தோ-ஐரோப்பிய மொழி குடும்பத்திற்கும் இடையிலான உறவை வெளிக்கொண்டுவரும் வகையில், தமிழ் வேர்ச்சொல் வல்லுநர்களைக் கொண்ட குழு ஒன்று அமைத்து அகரமுதலி உருவாக்கம் சிறப்பு திட்டத்தை அரசு செயல்படுத்தும்.

பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு இருபத்தி ஒரு இந்திய உலக மொழிகளில் அச்சு மற்றும் மின் நூல் பதிப்புகளாகவும் வெளியிடப்படும் இப்பணிகள் 5 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
விழுப்புரம், ராமநாதபுரத்தில் அரசு அருங்காட்சியகங்கள்!

திய கற்கால இடங்களைத் தேடி ஐந்து மாவட்டங்களில் கள ஆய்வும் பொருநை ஆற்றங்கரையில் தொல்லியல் இடங்களைத் தேடி கள ஆய்வும் மேற்கொள்ளப்படும்.
விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் ரூ.10 கோடி ரூபாய் செலவில் புதிதாக அரசு அருங்காட்சியகம் அமைக்கப்படும்.  குற்றாலத்திலுள்ள பழங்குடியினர் அகழ் வைப்பகம், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி தொல்பழங்கால அகழ்வைப்பகம், தருமபுரி நடுகற்கள் அகழ்வைப்பகம் ஆகியவை ரூ. 10 கோடியில் மேம்படுத்தப்படும்.

அரசு நிலங்களை பாதுகாக்க ரூ 50 கோடி!

அரசு நிலங்களை பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்கும் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்கு மான பணிகள் மேற்கொள்ளப்படும் இதற்காக சிறப்பு நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள்...

மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் கல்விறுவனங்களில் பணியாற்றும் உடற்பயிற்சி பயிற்றுநர் மற்றும் சிறப்பு கல்வியாளர்களுக்கு வழங்கப்படும் மாத மதிப்பூதியம் ரூ. 14,000 18,000 உயர்வு. கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்புத் தொகைக்காக ரூ. 450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்கள் உள்ளிட்ட 19 மாவட்டங்களிலுள்ள அரசு மருத்துவமனைகள் 1,019 கோடி ரூபாய் செலவில் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்திற்கு 2,542 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு 5,922.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்திற்கு 817 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

துறை வாரியாக நிதி ஒதுக்கீடு

 

  • ஒவ்வொரு துறையின் மேம்பாட்டுக்கும் பல்வேறு முக்கிய திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரங்கள் வருமாறு:
  • காவல்துறைக்கு ரூ.10,285 கோடி ஒதுக்கீடு.
  • பேரிடர் மேலாண்மைத்துறை ரூ.7400 கோடி ஒதுக்கீடு.
  • கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.1315 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்காக ரூ.496 கோடி ஒதுக்கீடு.
  • சுய உதவிக்குழுக்களுக்கான கடன், விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்க ரூ.4130 கோடி ஒதுக்கீடு.
  • கூட்டுறவுத்துறைக்கு ரூ.13,176 கோடி ஒதுக்கீடு.
  • பொதுவிநியோக திட்டத்தின் கீழ் உணவு மானியமாக ரூ.7500 கோடி ஒதுக்கீடு.
  • சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்த ரூ.849.20 கோடி ஒதுக்கீடு.
  • பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.36,895.89 கோடி ஒதுக்கீடு.
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ரூ.293.26 கோடி ஒதுக்கீடு.
  • மருத்துவத்துறைக்கு ரூ.17901.23 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு.
  • நகர்ப்புற வளர்ச்சித்துறை ரூ.8737 கோடி ஒதுக்கீடு.
  • அரசு ஊழியர்களுக்கான உயர்த்தப்பட்ட அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதற்திற்காக ரூ.19,000 கோடி ஒதுக்கீடு.
  • சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டங்களுக்கு ரூ.705 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.293 கோடி ஒதுக்கீடு.
  • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.20,400 கோடி ஒதுக்கீடு.
  • நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை மேம்பாட்டிற்கு ரூ.18,218 கோடி ஒதுக்கீடு.
  • தொன்மையான கோயில்களை சீரமைக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு. இந்து சமய அறநிலையத்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.340.87 கோடி ஒதுக்கீடு.
  • சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறை மேம்பாட்டிற்கு ரூ.911 கோடி நிதி ஒதுக்கீடு.
  • தமிழகத்தில் ஏற்றுமதியை மேம்படுத்த ரூ.100 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிப்பு.
  • பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3,700 கோடி ஒதுக்கீடு.
  • தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) 13,000 கோடி இழப்பை அரசே ஏற்கிறது என பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு. டான்ஜெட்கோவுக்கு மின் கட்டண மானியமாக ரூ.9,379 கோடியை அரசு வழங்கும்.
  • கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு.
  • நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கு ரூ.8,737 கோடி ஒதுக்கீடு.
  • துறைமுக சாலை திட்டம் – மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டத்திற்கு ரூ.5,770 கோடி ஒதுக்கீடு.
  • மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்துக்கு மானிய
  • மாக ரூ.1,520 கோடி ஒதுக்கீடு. இலவச பேருந்து திட்டத்தால் மகளிர் பயணிகளின் பங்கு 40%ல் இருந்து 61% ஆக அதிகரிப்பு.
  • ஏழை மக்களுக்கான வீடுகளை கட்ட ரூ.2,030 கோடி ஒதுக்கீடு விளிம்பு நிலையில் இருக்கும் இருளர் போன்ற பழங்குடி தமிழர்களுக்கு ரூ.20.7 கோடி மதிப்பீட்டில் 443 வீடுகள் கட்ட அரசு அனுமதி.
  • கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பராமரிப்புக்காக ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்யப்படு கிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.838.01 கோடி ஒதுக்கீடு.
  • சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறைக்கு ரூ.849 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு.
  • தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களை சீரமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு.
  • நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளுக்காக ரூ. 2787 கோடியும், பொது விநியோகத்திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.7,500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்காக ரூ.4,816 கோடி ஒதுக்கீடு.
  • தமிழ்நாட்டில், தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்திற்கு ரூ.1,906 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
  • மானிய விலையில் வீடு கட்டித்தரும் திட்டத்திற்கு ரூ.4,848 கோடி நிதி ஒதுக்கீடு
  • நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டமான அம்ரூத் 2.0 திட்டத்திற்கு ரூ.2,030 கோடி நிதி ஒதுக்கீடு