tamilnadu

அரசு மருத்துவர்கள் மார்ச் 2இல் உண்ணாநிலை போராட்டம்

சென்னை, பிப். 24- அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையில் முதலமைச்சர் தலையிடக் கோரி மார்ச் 2ஆம் தேதி உண்ணாநிலை போராட்டம் நடத்த உள்ளதாக அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக் குழு தெரிவித் துள்ளது. இதுகுறித்து தலைவர் பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்திற்கு மாநில அரசு நிவாரணம் எதுவும் வழங்கவில்லை. மருத்துவர் விவே கானந்தன் உயிரிழந்து ஓராண்டுக்கு பிறகும், அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படவில்லை. கடந்த ஆட்சியில் அரசு மருத்து வர்கள் உண்ணாவிரதம் இருந்த போது, நம் முதல்வர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார். அப்போது மருத்துவர்கள் தங்களை வருத்திக் கொள்ள வேண்டாம். அடுத்து அமையும் நம் ஆட்சியில் கோரிக்கை நிறைவேற் றப்படும் என உறுதியளித்தார். இது மக்களு க்கான அரசு மட்டுமல்ல, மருத்துவர்க ளுக்கான அரசு தான் என முதல்வர் தெரிவித்தார்.

ஆனால் புதிய ஆட்சி அமைந்ததும் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கை இதுவரை நிறை வேற்றப்படவில்லை. உயிர்காக்கும் அரசு மருத்துவர் களுக்கு டாக்டர் கலைஞர் கொடுத்த அரசாணை 354ஐ செயல்படுத்த, தொடர்ந்து அரசு மறுத்து வருகிறது. கடந்த 10 வருடங் களுக்கு முன்பு இருந்ததை ஒப்பிடும் போது, நம் சுகாதார கட்டமைப்பு பல மடங்கு வலுப் படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான பங்களிப்பை தரும் அரசு மருத்து வர்களுக்கு, 2009ஆம் ஆண்டில் போடப் பட்ட அரசாணையின் மூலம் கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் கூட இன்னும் வழ ங்கப்படவில்லை. சுகாதாரத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. அதேநேரத்தில் நாட்டிலேயே தமிழகத்தில் மட்டுமே பல வருடங்களாக அரசு மருத்து வர்கள் உரிய ஊதியம் வேண்டி போராடி வருகிறோம். கொரோனா முதல் அலையின் போதே கர்நாடகா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில், அரசு மருத்துவர்களின் சேவையை அங்கீக ரித்து, ஊதியக் கோரிக்கையை நிறை வேற்றினார்கள்.

ஆனால் இங்கோ மூன்றா வது அலையை கட்டுப்படுத்திய பிறகும், பங்களிப்பை வழங்கிய மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. எனவே 12 ஆண்டுகளில் ஊதியப் பட்டை நான்கு வழங்க, தமிழக முதல்வ ரின் தலையீட்டை வேண்டி, வரும் மார்ச் 2ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கிறோம். அதற்கு முன்னதாகவே நம் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என  கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.