tamilnadu

தனியார் நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம்

சென்னை, மார்ச் 14 - பள்ளிகளில் தொழில் நுட்ப தர மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்  திங்களன்று (மார்ச் 14) தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் முன்னிலையில் காகினசன்ட் நிறுவ னத்துடன் கையெழுத்தானது. அரசுப் பள்ளிகளில் தொழில் நுட்பக் கட்டமைப்பை வலிமைப்படுத்தவும், தொழில் நுட்ப கற்றல் வளங்களை எளிமை யாக உருவாக்கிடவும் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தொழில் நுட்ப மற்றும் கணினி மயமான பள்ளிகளின் செயல் முறைக்கு ஏற்ற வகையில் ஆசிரியர்களின் தொழில் நுட்ப திறன் இதன் வாயிலாக மேம்படுத்தப்படும். இதனைத் தொடர்ந்து, ஆசிரியர் தேர்வு  வாரியம் வாயிலாக தேர்வு 95 பேர் வட்டார  கல்வி அலுவலர்களாக தேர்வு செய்யப் பட்டுள்ளனர். இவர்களில் 4 நபர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். கருணாநிதி எழுதி, பேராசிரியர் ஜெய பிரகாஷ் தெலுங்கில் மொழிபெயர்த்த ‘திருக்குறள் உரை’, எழுத்தாளர் சுந்தர ராமசாமி எழுதி, கௌரி கிருபானந்தன் தெலுங்கில் மொழிபெயர்த்த ‘ஒரு  புளியமரத்தின் கதை’ ஆகிய நூல்களை யும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டார். இவை ‘திசைதோறும் திராவிடம்’ திட்டத்தின் கீழ் வெளியிடப்படும் 7 மற்றும் 8ஆவது நூல்களாகும். இந்நூல்களை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால், ஹைதராபாத் புக்  டிரஸ்ட் நிறுவனத்தோடு கூட்டு வெளி யீடுகளாகக் கொண்டு வரப்பட்டுள்ளது.