சென்னை, ஜூன். 27- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலக்குழு உறுப்பினரும், நாடக, திரைப்பட கலை ஞருமான வ.இராமு சென்னையில் திங்களன்று (ஜூன். 27-) காலமானார். அவருக்கு வயது 60. தனது பள்ளி பருவத்தில் இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து பொதுவாழ்வை தொடங்கிய இராமு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் இணைந்து பண்பாட்டு ஊழியராக செயல்பட்டவர். அதன் மாநிலக்குழு உறுப்பி னராகவும், தேர்வு செய்யப் பட்டார். சென்னை கலைக்குழுவில் துடிப்பான நடிப்பின் மூலம் வீதி நாடக கலை ஞராக தன்னை அடை யாளப்படுத்திக் கொண்ட வர். சைதாப்பேட்டை கலை இரவு நிகழ்வின் முக்கியமான அமைப்பாளர்களில் ஒரு வராக விளங்கியவர் சென்னையில் நடைபெற்ற நாட்டுப்புற கலைஞர்களின் கோரிக்கை சங்கமத்தை முன்னின்று நடத்தியவர். தமிழ் திரையுலகில் சிறந்த குணச்சித்திர நடிகராக முத்தி ரைப்பதித்து மிளிர்ந்தவர். உடல்நிலை குன்றிய அவர் சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார் சிகிச்சை பலனின்றி திங்களன்று (ஜூன்.27)மாலை 6.30 மணியளவில் அவர் காலமானார். அவரது இறுதி ஊர்வலம் சென்னை ஊரப்பாக்கம் (டீக்கடை பேருந்து நிறுத்தம்) பெரியார் நகர் 15வது தெருவில் உள்ள அவரது இல்லத்திலிருந்து செவ்வாயன்று (ஜூன்28) மாலை நடைபெறும். இரங்கல் பூ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பல குணச்சித்திர பாத்திரங்க ளில் நடித்து புகழ்ப்பெற்ற வ.இராமுவின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்க முன்னணி தோழர்களும், திரைத்துறை யினரும் இராமுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.