tamilnadu

img

சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு

சென்னை, நவ.27 -  முன்னாள் பிரதமர் வி.பி. சிங்-கின் முழு உருவச் சிலையை, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்களன்று சென்னையில் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ், வி.பி. சிங் அவர்களின் துணைவியார் சீதா குமாரி, மகன் அஜயா சிங் உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற - சட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பிரதமர் பதவியில் 11 மாத காலமே இருந்தாலும், பிற்படுத்தப்பட்ட மக்க ளுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு, தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப் பிரச்ச னையான காவிரி நீருக்கான நடுவர் மன்றம், மாநிலங்களுக்கு இடையி லான ஆணையம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பணிகளை ஆற்றிய வரான வி.பி. சிங் அவர்களின் நினை வைப் போற்றும்வகையிலும், அவ ருக்குத் தமிழ்ச் சமுதாயத்தின் நன்றி யைத் தெரிவிக்கும் வகையிலும் சென்னையில் முழு உருவ கம்பீரச் சிலை அமைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 20.4.2023 அன்று பேரவை விதி எண்:  110-இன் கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் 52 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில், சென்னை மாநிலக்கல்லூரியில் நிறுவப்பட்ட வி.பி. சிங் முழு உருவச் சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பொதுப் பணித் துறை அமைச்சர் வேலு, இளை ஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள், தலைமைச் செய லாளர் சிவ் தாஸ் மீனா, பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்திர மோகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மருத்துவர் இரா. செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த. மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.  (முழு விபரம்: பக்கம் 4)