tamilnadu

img

பொது சொத்துகளை தனியாருக்கு தாரை வார்க்கவே ஆளுநர் தமிழிசைக்கு நில உரிமை அதிகாரம்

புதுச்சேரி, ஜூன் 26-  பொது சொத்துகளை தனியா ருக்கு தாரை வார்த்து தரவே ஆளு நர் தமிழிசையிடம் நில உரிமை அதி காரம் தரப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டி யுள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியா ளர்களிடம் கூறுகையில், புதுச்சேரி அரசு செயல்படாத அரசாக உள்ளது.  மக்களை பற்றி கவலைப்படவில்லை. வெளிநாட்டு மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலையிடம் கோடி கணக் கில் லஞ்சம் பேசப்படுகிறது. முதல்வர் முதல் அதிகாரிகள் வரை லஞ்சம்  தலைவிரித்து ஆடுகிறது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. கஞ்சா சர ளமாக விற்பனை செய்யப்படுகிறது. பெயர் பெற்ற ஜிப்மரை சீரழித்து விட்டார்கள். ஜிப்மரை கவனிக்காத ஒன்றிய அரசால் புதுச்சேரியில் எப்படி வளர்ச்சியை கொண்டுவர முடியும்.  இரு தினங்களுக்கு முன்பு ஆளு நர் தலைமையில் நடந்த ஆய்வு  கூட்டத்தில் முதல்வர், அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் ஆளுந ருக்கு நில உரிமை அதிகாரத்தை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிலம் சம்பந்தமான பிரச்சனைகளில் முடிவு எடுக்கின்ற அதிகாரம் அமைச்ச ரவைக்கு மட்டுமே உண்டு. புதுச்சேரி யில் பொது சொத்துக்கள் நிறைய உள்ளன. பொது சொத்துகளை தனி யாருக்கு தாரைவார்த்து கொடுப்பதற்  காக ஆளுநருக்கு நில அதிகாரத்தை  கொடுத்து இந்த முடிவு எடுக்கப்பட் டுள்ளது. இதன் மூலம் சேதராப்பட்டில் உள்ள 800 ஏக்கர் நிலம் மற்றும் பொதுத்  துறை சொத்துகளை கபளீகரம் செய்  யும் வேலை நடந்து வருகிறது. முதல்  வர் தனது அதிகாரத்தை ஆளுநர் தமி ழிசையிடம் விட்டு கொடுத்துவிட்டார்.  ஆளுநர் சூப்பர் முதல்வராகவும், ரங்க சாமி டம்மி முதல்வராகவும் இருப்ப தாக நான் கூறியது இதன் மூலம் நிரூ பணமாகியுள்ளது என்று தெரிவித்தார்.