tamilnadu

img

எல்ஐசியின் சந்தை மதிப்பில் ரூ.77,600 கோடி சூறை!

புதுதில்லி, மே 23- எல்ஐசியை பங்குச்சந்தை சூதாட்டத்தில் இழுத்து விட்ட மோடி அரசு, கடந்த வாரத்தின் 4 வர்த்தக நாட்களில் (மே 17 முதல் 20 வரை)  மட்டும் அதன் சந்தை மதிப்பில் 77 ஆயிரத்து 600 கோடியை சூறையாடியுள்ளது. இந்த வார வர்த்தகத்தின் முதல் நாளான திங்கட்கிழமையன்றும் (மே 23) எல்ஐசி பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளதால், சந்தை மதிப்பில் மேலும் பாதிப்பை எதிர்கொள்ளும் அபாயத்திற்கு எல்ஐசி நிறுவனத்தை மோடி அரசு தள்ளியிருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி-யை (Life Insurance Corporation Of India - LIC) தனியார் முதலாளிகளுக்கு பந்தி வைக்கும் திட்டத்தின் ஒருபகுதியாக, முதற்கட்டமாக அதன் 3.5 சத விகிதப் பங்குகளை ஆரம்பப் பொதுச்சலுகை (Initial Public Offering - IPO) அடிப்படையில் மோடி அரசு விற்றது. பங்கு ஒன்றின் விலை  அதிகபட்சமாக 949 ரூபாய் என்ற அடிப்படையில், மொத்தம் 22 கோடியே 30 லட்சம் பங்குகள் விற்கப்பட்டன. இதன்மூலம் 20 ஆயிரத்து 557 கோடி மோடி அரசுக்கு கிடைத்தது.

தனியாருக்கு விற்கப்பட்ட இந்த பங்குகள் கடந்த மே 17 அன்று முதன்முறையாக பங்குச்  சந்தையில் பட்டியலிடப்பட்டன. முன்னதாக எல்ஐசி பங்குகளுக்கு பெரிய வரவேற்பு இருக்  கும்... அதன்மூலம் லாபம் அடையலாம் என்று  மிகுந்த எதிர்பார்ப்புடன் சில்லரை முதலீட்டா ளர்கள் காத்திருந்தனர். ஆனால், முதலீட்டாளர்கள் வாங்கிய 949 ரூபாய் என்ற விலையைக் காட்டிலும் சுமார் 65 ரூபாய் தள்ளுபடி விலையில் சுமார் 867 ரூபாய் 20 காசுகள் என்ற குறைந்த விலைக்கே எல்ஐசி பங்குகள் பட்டியலிடப்பட்டது. வாங்கிய விலையைக் காட்டிலும் குறைந்த விலைக்கு  போனதால், எல்ஐசி சில்லரை முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.  அதுமட்டுமல்ல, பங்குச் சந்தையில் பட்டிய லிடப்பட்ட முதல் நாளிலேயே எல்ஐசி-யின் சந்தை மதிப்பு 42 ஆயிரத்து 500 கோடி ரூபாய்  அளவிற்கு சரிந்தது. எல்ஐசி-யின் 100 சதவிகித  பங்குகளின் சந்தை மதிப்பு முன்பு ரூ. 6 லட்சம்  கோடியாக மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், அது கடந்த மே 17 அன்று ஒரேநாளில் ரூ. 5 லட்  சத்து 57 ஆயிரம் கோடியாக சரிந்தது. 

எல்ஐசி நிறுவனத்தின் உண்மையான உட்பொதிக்கப்பட்ட மதிப்பு ரூ. 13 லட்சம் கோடிக்  கும் அதிகம். அதை ரூ. 6 லட்சம் கோடி என்று  மோடி அரசு சரிபாதியாக குறைத்து மதிப்பிட் டது. இந்த மதிப்புக்குறைப்பே ஒரு மோசடி என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. எல்ஐசி நிறு வனத்தின் சொத்து மதிப்பைக் குறைத்து, அவற்றை கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு அடிமாட்டு விலைக்கு விற்கும் சதி பின்னணி யில் இருப்பதாக எல்ஐசி ஊழியர் சங்கங்கள் கூறின.  எல்ஐசி பங்குகள் சந்தையில் பட்டியலிடப் பட்ட மே 17 அன்று அதுதான் நடந்தது. பங்கு  ஒன்று 949 ரூபாய் என்ற விலைக்கு வாங்கப்  பட்ட நிலையில், அது 867 ரூபாய் என்ற குறைந்த  விலைக்கு விற்பனைக்கு விடப்பட்டது. இதன்  மூலம் எல்ஐசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் 42 ஆயிரத்து 500 கோடி இழப்பைச் சந்தித்தது. எனினும் வரும் நாட்களில் எல்ஐசி பங்கு களின் விலை உயரும். அதன்மூலம் சந்தை மதிப்பும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், மே 17, 18, 19 என கடந்த வாரத்தின் மூன்று வர்த்தக நாட்களிலும் எல்ஐசி பங்குகள் விலை உயரவில்லை. அல்லது விலை உயர விடாமல் நிறுவன முதலீட்டாளர்களால் பார்த்துக் கொள்ளப்பட்டது.  இதன்காரணமாக இந்த நான்கு நாட்க ளில் மட்டும் எல்ஐசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு 77 ஆயிரத்து 600 கோடி சூறையாடப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, பங்குச்சந்தையில் 5-ஆவது பெரிய நிறுவனம் என்ற பெயரையும் எல்ஐசி இழந்துள்ளது.  இதனிடையே, இந்த வார வர்த்தகத்தின் முதல் நாளான திங்கட்கிழமையன்று (மே 23) எல்ஐசி பங்குகள் 1.37 சதவிகிதம் சரிவையே கண்டன. பங்கு ஒன்றின் விலை 814 ரூபாய் 80 காசுகள் என்ற அளவிற்கு வீழ்ச்சியில் இருந்  தது. எல்ஐசி பங்குகள் விலை இதுவரை பட்டிய லிடப்பட்ட விலையைக் காட்டிலும் 11.35 சத விகிதம் அளவிற்கு சரிவிலேயே உள்ளது.