மலர் கண்காட்சி: 1.77 லட்சம் பேர் கண்டுகளிப்பு
உதகை, மே 25- உதகையில் கடந்த 15 ஆம் தேதி துவங்கி ஞாயி றன்று வரை 10 நாட்களாக நடைபெற்ற 127 ஆவது மலர் கண்காட்சியை 1 லட் சத்து 77 ஆயிரம் பேர் கண்டு ரசித்துள்ளதாக பூங்கா நிர் வாகம் அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை (இன்று) இரண்டு நாட்கள் மிக அதிக கனமழை பெய் யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் உதகையில் அமைந்துள்ள தொட்ட பெட்டா காட்சி முனை, உதகை படகு இல் லம், பைக்காரா படகு இல்லம், பைன் பாரஸ்ட், ஷூட்டிங் மட்டம், அவலாஞ்சி உள் ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், விடுமுறை தினமான ஞாயிறன்று, உதகைக்கு வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகள் இங்கு அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக திகழக்கூடிய உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடை பெற்று வரும் 127 ஆவது மலர்கண்காட்சி யின் நிறைவு நாளை மழையை பொருட் படுத்தாமல் கண்டு ரசித்தனர். தமிழகம் மட்டு மல்லாமல் கேரளம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகள் வண்ண வண்ண குடை களை பிடித்தபடி, குடும்பம் குடும்பமாக பூங் காவிற்கு வருகை புரிந்து, மலர் அலங்காரங் களை கண்டு ரசித்தனர். கடந்த 15 ஆம் தேதியன்று துவங்கிய மலர் கண்காட்சியை ஞாயிறன்று வரை 10 நாட்களில் ஒரு லட்சத்து 77 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்துள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.