சென்னை, செப்.23- “இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள் ளப்படும்” என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து துள்ள பதிவில், “உடல் உறுப்பு தானத் தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயா ளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணி யில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வரு கின்றது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச் சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்பு களைத் தானமாக அளித்திட முன் வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர் களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரி யாதையுடன் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
மறுவாழ்வு அளிக்கலாம்: உயி ருடன் இருக்கும் ஒருவர், அரசின் விதி களுக்கு உட்பட்டுதனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு (அதாவது அப்பா, அம்மா, சகோதரர், சகோதரி, மகன், மகள்,கணவன், மனைவி ஆகிய 8 உறவுகளுக்குள் மட்டும்) 2 சிறுநீர கங்களில் ஒன்று, கல்லீரலின் ஒருபகு தியை தானமாக வழங்க முடியும். அதேபோல, மூளைச்சாவு அடைந் தவர்களிடமிருந்து கண், இதயம், நுரை யீரல், கல்லீரல், கிட்னி, கணையம், எலும்பு, தோல் உள்ளிட்ட உறுப்பு களை தானமாகப்பெறலாம். இதன் மூலம் அதிகபட்சமாக 12 பேருக்கு மறு வாழ்வு அளிக்க முடியும். உறுப்பு தானத்தை முறைப்படுத்து வதற்காக தமிழக அரசு கடந்த 2008-ல் உறுப்பு தானத் திட்டத்தை தொடங்கி யது. இத்திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமனைகளில் யாராவது மூளைச் சாவு ஏற்பட்டு, அவரது உறுப்பு களை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தால், தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் வழியாக முன்னுரிமை வரிசை அடிப்ப டையில் தேவைப்படும் நோயாளி களுக்கு, அவர்கள் பதிவுசெய்த மருத்துவமனைக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.