சென்னை,பிப். 21- தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை நிதிய மைச்சர் தங்கம் தென்னரசு செவ்வா யன்று (பிப்.20) தாக்கல் செய்தார். இந்த துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.30,355.32 கோடி நிதி ஒதுக்குவதற்கு வகை செல்கின்றன. இதில் ரூ.26 ஆயிரத்து 590.09 கோடி வருவாய் கணக்கிலும், ரூ.3,499.98 கோடி மூலதனக் கணக்கிலும் ரூ.265.25 கோடி கடன் கணக்கிலும் அடங்கும். 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி 2023-24 ஆம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர், புதுப்பணிகள் மற்றும் புது துணைகள் குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட செலவினங்களுக்கு சட்டமன்ற பேரவையின் ஒப்பு தலை பெறுவது இந்த துணை மதிப் பீடுகளின் முக்கிய நோக்கமாகும். இந்த துணை மதிப்பீடுகளில் எரிசக்தி துறையில்,தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்திற்கு இழப்பீடு நிதியாக 15,593.95 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு ரொக்கமாக நிவாரணத் உதவிதொகை ரூ.1,486.93 கோடி இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்பாராத தொடர் மழைப்பொழிவு மற்றும் வெள்ள பெருக்கால் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரொக்க நிவாரண உதவியாக ரூ.541.37 வழங்கப்பட்டுள்ளது. இதே போல் சிறப்பு திட்ட செயலாக்க துறையின் மூலம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு கூடுதல் செலவீனமாக ரூ.1,055.34 கோடி வழங்கப்பட்டுள் ளது.