tamilnadu

img

3 ஆவது நாளாக தொடர்ந்து போராடும் விவசாயிகள் கிராம மக்கள் ஆதரவு

மயிலாடுதுறை, டிச.23- மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடை யூரில் தொடர்ந்து 3 ஆவது நாளாக விவசாயி களின் தொடர் காத்திருப்பு போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  விவசாயிகளின் நியாயமான கோரிக்கை களை ஏற்க மறுத்து வருகிற நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஒப்பந்த நிறுவனத்துக்கும், தருமபுரம் ஆதீனத்துக் கும் ஆதரவாகவே பேச்சுவார்த்தைகளை நடத்துவதால். கோரிக்கைகள் நிறை வேறும் வரை போராட்டத்தை முடித்துக் கொள்ளமுடியாது என்று போராட்டக்குழு திட்டவட்டமாக கூறி 3 ஆவது நாளான வியாழனன்றும் போராட்டத்தை ஆவேச முழக்கங்களை எழுப்பி நடத்தினர்.  கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் வேளாங்கண்ணி-சென்னை தேசிய நெடுஞ்சாலையோரமாக இரவு-பகலாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கி ணைப்பில் நடத்தப்படும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், கொள்ளிடம் பகுதி மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள், உறுப்பினர்கள், சுற்றி யுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கண க்கானோர் விவசாயிகளுக்கு துணையாக போராட்டக்களத்தில் இருந்து வருகின்றனர்.

கிராம பெண்கள் ஒட்டுமொத்தமாக போராட்டத்தில் பங்கேற்றனர்.  நான்கு வழிச்சாலையால் நிலங் களை இழந்த விவசாயிகளுக்கும், குடி யிருப்புகளை இழக்கும் ஏழைகளுக்கும் உரிய இழப்பீடும், மாற்று இடமும் வழங்க வேண்டு மென்று போராடும் விவசாயிகளுக்கு ஆதர வாக டி.மணல்மேடு கிராமத்தை சேர்ந்த ஒட்டு மொத்த பெண்களும் ஊர் மறியல் செய்து  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு டி.மணல்மேடு கிராமத்தின் சிபிஎம் கிளை செயலாளர் ஏ.உதயக்குமார் தலைமை யிலான தோழர்கள் போராட்டக்காரர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், தேநீர், இரவு  படுக்கைக்கான ஏற்பாடுகளையும் முறை யாக செய்து வருகின்றனர்.  விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவாக கொத்தங்குடி கிளை சார்பில் அரிசி ஒரு மூட்டையும், பண உதவி, திருக்கடையூர் முத்து வாட்டர் பாட்டீல், பிஸ்கட் ஆகியவற்றை வழங்கினர்.  சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் தொடர்ந்து ஆதரவளித்து நடைபெற்று வரும் போராட்ட த்தை முடிவுக்கு கொண்டுவர மாவட்ட ஆட்சியரும், தருமபுரம் ஆதீனமும் முடிவு செய்வார்களா?