ராணிப்பேட்டை, அக். 15- ராணிப்பேட்டை மாவட்டத்தில் மின் கோபுரங்களால் பாதித்துள்ள விவ சாயிகளுக்கு உயர்ந்தபட்ச இழப்பீடு வழங்க மறுப்பதால் 4 ஆவது நாளாக காத்திருப்பு தொடர்கிறது. தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் பவர்கிரிட் நிறுவனம் சார்பில் அமைக்கப்படும் உயர்மின் கோபுரங்களால் பாதிக்கும் ராணிப் பேட்டை விவசாயிகளுக்கு உயர்ந்த பட்ச இழப்பீடு வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நடத்தி வரும் காத்திருப்பு போராட்டத்தின் 3ஆவது நாளில் கால்நடைகளுடன் விவசாயிகள் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பி. டில்லிபாபு,“ விவசாயிகளின் நியாய மான கோரிக்கைகளை நிறைவேற்று வதற்கு மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். அப்போது போராட்டக்களத்திற்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார், ஆற்காடு வட்டாட்சியர் எம்.கோபாலகிருஷ்ணன், மண்டல துணை வட்டாட்சியர் பாலாஜி, திமிரி வருவாய் ஆய்வாளர் மு.ராஜலக்ஷ்மி, பரதராமி கிராம நிர்வாக அலுவலர் சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திருவண்ணாமலை, கோவை மாவட்டங்களில் மின்கோ புரங்கள் அமைத்தபோது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அந்த மாவட்ட நிர்வாகங்கள் வழங்கி யதைப் போன்று ராணிப்பேட்டை மாவட்டத்திலும் உயர்ந்தப்பட்ச இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத் தலைவர்கள் வலி யுறுத்தினர். ஆனால், அதிகாரிகள் எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை. சங்கத் தலைவர்கள் தங்களது நிலைபாட்டில் உறுதியாக இருந்ததால் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. இதனால், போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை (அக்.16) நடை பெறும் நான்காவது நாள் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செய லாளர் சாமிநடராஜன் கலந்து கொள்கிறார்.