tamilnadu

img

நிலத்தடி நீருக்கு வரி போடும் ஒன்றிய அரசைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நிலத்தடி நீருக்கு வரி போடும் ஒன்றிய அரசைக்  கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜுன் 29- 
விவசாயிகள், விவசாயத்திற்கு பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிக்கும் ஒன்றிய அரசின் முடிவை கண்டித்தும், அந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியகமிட்டி சார்பில், சனிக்கிழமை அன்று மண்ணச்சநல்லூர் - எதுமலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் நடராஜன், விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி, சிபிஎம் மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியசெயலாளர் முருகேசன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கே. முருகேசன் ஆகியோர் பேசினர். வீராணி கிளைச் செயலாளர் சிவக்குமார் நன்றி கூறினார். 
புதுக்கோட்டை 
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். பொன்னுச்சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன், பொருளாளர் எம். பாலசுந்தரமூர்த்தி,  துணைச் செயலாளர்கள் த.அன்பழகன், எஸ்.நாராயணசாமி, வி.ரெத்தினவேல், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஜி. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்