தேனி ,செப்.30- மலை மாடு மேய்ச்சலுக்கு வனத்துறை கடுமையாக தொல்லை தருகிறார்கள் .எனவே எங்களால் மலை மாடுகளை மேய்க்க முடிய வில்லை .மாடுகளை அரசே விலைக்கு வாங்க வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியருக்கு மலைமாடுகள் சங்க தலைவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் . தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிர மணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை யின் திட்ட இயக்குநர் இரா.தண்டபாணி, வேளாண் மைத் துறை இணை இயக்குநர் அனுசியா, பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் சிந்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவ) பொ.தனலட்சுமி மற்றும் அனைத்து துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் மற்றும் விவ சாயிகள்; மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய கர்னல் பென்னி குயிக் பாரம்பரிய மலை மாடுகள் மெய்போர் சங்க தலை வர் கென்னடி ,இயற்கை விவசாயம் செய்ய அரசு வலியுறுத்தி வரும் நிலையில் வனப்பகுதியில் மாடுகளை மேய்க்க வனத்துறையினர் தடுத்து வருகிறார்கள் .சரணாலய பகுதியில் மாடுகள் மேய்க்க அரசு தடை விதிக்காத நிலையில் வனத் துறையினர் கடுமையாக நடந்து கொள்கிறார் கள்.பொய் வழக்கு போடுவோம் என மிரட்டு கிறார்கள் .எனவே எங்களிடம் உள்ள மாடுகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க தயாராக உள்ளோம் ..மாட்டுக்கு ரூ 20 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் . தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் டி.கண்ணன் பேசுகையில், கோரையூத்து சோதனை சாவடி பகுதியில் வன ஊழியர் செல்லத் துரை என்பவர் சுமார் 11 நாய்களுக்கு திம்மட் என்ற கொடிய விஷத்தை உணவில் கலந்து கொலை செய்துள்ளார் .இது குறித்து நடவடிக்கை யும் ,உடந்தையாக இருந்த காவல்துறையினர் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றார்.
பன்றிகளால் பயிர் சேதத்தை தடுத்திடுக
சோத்துப்பாறை அணையில் பூங்கா அமைத் திடவும், அகமலை பகுதியை சுற்றுச்சூழல் சார்ந்த சுற்றுலா தலமாக உருவாக்க வேண்டும் . காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதத்தை தடுத்திட வேண்டும். முல்லை பெரியாறு பேபி அணையை பலப்படுத்தி, ரூல்கவ் முறையை ரத்து செய்திட வேண்டும். அரசு கால்நடை மருத்துவமனைகள் மதியம் 12 மணி வரை செயல்படுவதை மாலை 2 மணி வரை செயல்பட வேண்டும் .மேகமலை பகு தியில் உள்ள பட்டா காடுகளுக்கு செல்ல சுமார் 1.5 கிலோ மீட்டர் வனத்துறை பாதைகளை பயன் படுத்தி வந்தோம் .தற்போது வனத்துறையினர் நடக்க தடை விதித்துள்ளனர் .அதே போல வனப் பகுதியில் உள்ள பட்டா காடுகளில் ஏலம்,காப்பி போன்ற பயிர்களை நடுவதற்கு வனத்துறை அனு மதி பெற வேண்டும் என சொல்கிறார்கள் .ஆட்சி யர் தலையிட்டு தடுக்க வேண்டும் .விவசாய நிலங் களில் பன்றிகளால் ஏற்படும் சேதத்தை தடுக்க வேண்டும்.அதை வன விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் போன்ற பல்வேறு கோ ரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி கள் முன் வைத்தனர்.
ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு
அதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர், வன விவசாயிகள் ,மலை மாடுகள் பிரச்சனை குறித்து வனத்துறையினரிடம் கலந்து ஆலோசனை பெற்று முத்தரப்பு கூட்டம் நடத்தப்படும் .நாய்கள் கொல்லப் பட்ட விவகாரத்தில் பெரியகுளம் வருவாய் கோட் டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டார்.