கிருஷ்ணகிரி, ஜூலை 29- கிருஷ்ணகிரி பட்டாசு குடோனில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டை நேதாஜி சாலையில் ஆரோக்கியசாமி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் ரவி என்பவர் பட்டாசு கடை மற்றும் குடோன் நடத்தி வந்தார். அந்த கடைக்கு அருகில் ராஜேஸ்வரி என்ப வர் உணவகம் நடத்தி வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை (ஜூலை 29) காலை உணவகத்தில் சிலிண்டர் வெடித்து, அந்த தீ பட்டாசு கடைக்கு பரவியுள்ளது. மேலும் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் 3 வீடுகளும் இடிந்து தரை மட்டமாகியுள்ளன. உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களும் கட்டிட இடிபாடுகளில் சிக்கினர். இந்த விபத்தில், பட்டாசு கடை உரி மையாளர் ரவி, அவரது மனைவி ஜெயஸ்ரீ, மகள் ருத்திகா, மகன் ருத்தீஷ், உணவக உரிமையாளர் ராஜேஸ்வரி, இம்ரான், இப்ராஹிம் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிவா என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. தீ அணைப்புத் துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் பட்டாசு குடோன் வைக்க அனுமதி அளித்தது எப்படி என காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் சரயு, பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், காவல் துறை கண்காணிப்பாளர் சரோஜ் குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.