சென்னை, அக். 15 - பாஜக-வை விட்டு பிரிந்தாலும், கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட நிலையே நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுகவுக்கு ஏற்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டம் சார்பில் வெள்ளியன்று (அக்.13) நுங்கம்பாக்கத்தில் சிபிஎம் அரசியல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசியதன் சுருக்கம் வரு மாறு: பாஜக - அதிமுக இடையே பிளவு ஏற்பட்டுள் ளது. பாஜக பலவீனப்படுவது, தனிமைப்படு வது நல்லது. பாஜக அணியிலிருந்து வெளி யேறுவதற்கு சில தினங்களுக்கு முன்பு மோடியை புகழ்ந்து நாடாளுமன்றத்தில் அதிமுக பேசியது. எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரித்திருந்தால் பாஜக ஆட்சியே கவிழ்ந்திருக்கும். அதை ஏன் செய்யவில்லை? காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து பறிப்பு, 3 வேளாண் சட்டங்கள் போன்றவற்றை அதிமுக ஆதரித்தது; வக்காலத்து வாங்கியது. இந்த வேளாண் சட்டங்களுக்கு நிகராக ஒரு சட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றியது. குடியு ரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அதிமுக வாக்க ளித்திருந்தால் அந்த சட்டம் நிறைவேறி இருக் காது. பாஜக கொண்டு வந்த அனைத்தையும் ஆதரித்துவிட்டு, தற்போது விலகி உள்ளதாக கூறு கிறார்கள். 5 மாநில தேர்தல் முடிந்த பிறகு பாஜக எதையாவது முடக்கிவிட்டால் அதிமுக தனது நிலைபாட்டில் உறுதியாக இருக்குமா என்று தெரியாது. பாஜகவை விட்டு பிரிந்தாலும், கடந்த தேர்தல்களில் கொடுத்த அடியை, வர விருக்கிற தேர்தல்களிலும் மக்கள் தருவார்கள். மனித உரிமை பாதிக்கப்படுகிற, பாலியல் வன்முறை சம்பவங்களில் அனைத்து அரசியல் இயக்கங்களும் கவனம் செலுத்த வேண்டும். அடக் கப்பட்ட ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் பாதிக்கப்படுகிறபோது மார்க்சிஸ்ட்கட்சியே முன்னின்று தொடர்ந்து போராடுகிறது.
தமிழ்நாட்டிற்கு நிதி தர மறுப்பதா?
திமுக அரசை ஆட்சி செய்யவிடாமல் ஒன்றிய அரசு சித்து வேலைகளை செய்கிறது. நிதி பகிர்வில் பிற மாநிலங்களுக்கு கொடுப்பதில் பாதியை கூட தமிழகத்திற்கு தர ஒன்றிய அரசு மறுக்கி றது. தமிழகத்தில் இருந்து அதிக வரி ஒன்றிய அரசு க்கு செல்கிறது. ஆனால், குறைந்த நிதியே திரும்பி வருகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதை காரணம் காட்டி எம்.பி.,க்களின் எண்ணிக்கையை பாஜக அரசு குறைக்க பார்க்கிறது. அனைத்து வகையிலும் தமிழகத்தை பழி வாங்குகிறது. ஒன்றிய அரசு அரசியல் ரீதியாக பழிவாங்க, எதிர்க்கட்சிகளை மிரட்டி பணியவைக்க குறி வைத்து ரெய்டுகளை நடத்துகிறது. ஆருத்ரா வழக்கை தமிழ்நாடு அரசு முறையாக விசாரித் தால் அண்ணாமலை சிறையில் இருக்க வேண்டி இருக்கும். அந்த ஊழலில் தொடர்பு டைய பாஜகவை சேர்ந்த ஆர்.கே.சுரேஷ் தலை மறைவாக உள்ளார். முறைகேடு செய்த பணம் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் தமிழகத்தில் ஆட்சியில் இல்லாத பாஜக செய்கிற கொடுமைகள். இதன் மீதெல்லாம் ஏன் ரெய்டு நடைபெறவில்லை? பாஜக பிரமுகர் வீட்டில் ரெய்டுக்கு சென்ற அமலாக்கத்துறை அதுகுறித்த விவரங்களை வெளியிடாதது ஏன்? மதவெறி இந்துத்துவா அரசியலை எதிர்த்து, மொழித்திணிப்பு, சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து பாஜகவை வீழ்த்துகிற பணியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியாக பல கட்சிகள் ஒன்றி ணைந்துள்ளோம். அதேவேளை, மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வை எதிர்த்து போராடு கிறோம். விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்படும்போது குரல் கொடுக்கிறோம். சுதந்திரத்தை பாதுகாக்க, பாசிசபாணி பாஜக ஆட்சி மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றாமல் தடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.