tamilnadu

போதைப்பொருள் வழக்கு ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு அமலாக்கத் துறை சம்மன்

போதைப்பொருள் வழக்கு  ஸ்ரீகாந்த் கிருஷ்ணாவுக்கு அமலாக்கத் துறை சம்மன்!

சென்னை: தமிழ்த் திரைப்பட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் போதைப்பொருள் வழக்கில்  சிக்கியிருக்கும் நிலையில், அவர்களுக்கு  அமலாக்கத் துறையும் தற்போது சம்மன் அனுப்பியுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தியதாக, நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். சில வாரங் களுக்கு முன்னர் தான், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியே வந்தனர். இதனிடையே, இந்த இருவரின் வங்கிப் பரிவர்த்த னைகள் மற்றும் சொத்துகள் தொடர்பாக அமலாக்கத்துறை  விசாரணை மேற்கொண்டு வருகிறது. போதைப்பொருள் நிதி  வெளிநாட்டுக்குச் சென்றதா எனும் கோணத்திலும் சோதனை நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இரு வருக்கும்  அமலாக்கத்துறை தற்போது சம்மன் அனுப்பி யுள்ளது. ஸ்ரீகாந்த் அக்டோபர் 28 அன்றும், கிருஷ்ணா அக்டோபர் 29 அன்று ஆஜராகுமாறும் கூறப்பட்டுள்ளது.