tamilnadu

img

புற்றுநோய் தடுப்பூசியை இலவசமாக தர வேண்டும் மகளிர் தின மருத்துவ முகாமில் வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 8 - பெண்களுக்கு புற்றுநோய் தடுப்பூசியை இலவசமாக தர  வேண்டும் என்று மகளிர் தினத்தை யொட்டி நடைபெற்ற மகளிர் தின நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது. சர்வதேச மகளிர் தினத்தை  முன்னிட்டு ஆகாஷ் குழுந்தை யின்மை சிகிச்சை மையமும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் இணைந்து இலவச சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றை நடத்தின. இந்த முகாமில் கர்பப்பை புற்று நோய் பரிசோதனை, மார்பக புற்று நோய் பரிசோதனை, எலும்பு  உறுதித் தன்மை, ரத்த சோகை பரி சோதனை போன்றவை மேற்கொள் ளப்பட்டன. இந்நிகழ்வில் மருத்துவர் ஜெயராணி பேசுகையில், “பெண் கள் புற்று நோயிலிருந்து தற்காத்து கொள்வதற்கான தடுப்பூசி விலை 3 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரம்  ரூபாயாக உள்ளது.

இந்த விலை கொடுத்து ஏழைப் பெண்களால்  போட்டுக் கொள்வது சாத்திய மில்லை. ஆரம்ப சுகாதார நிலை யங்களில் நீரிழிவு, ரத்த அழுத்த நோய்களுக்கு மாத்திரைகள், கொரோனாவுக்கு தடுப்பூசி வழங்கு வது போல் புற்று நோய் தடுப்பூசி யையை இலவசமாக வழங்க வேண்டும்” என்றார். மாதர் சங்கத்தின் மாநில பொதுச்  செயாளர் பி. சுகந்தி பேசுகையில், “2021 கொரோனா காலத்தில் பெண்கள் மீதான வன்முறை 46 விழுக்காடு அதிகரித்துள்ளது. வன்முறைக்கு எதிராக ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறை யில் போராடுவது சாத்தியமில்லை. அமைப்பு ரீதியாக ஒன்றுபட்டு போராட வேண்டும்” என்று வலியுறு த்தினார். “பெண்கள் தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்துவதை விட குடும்ப உறுப்பினர்களின் உடல்நலத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு கவனம் செலுத்து கிறார்கள்.

தங்கள் உடல்நலத்தை பேணுவதில் சிரத்தையற்று இருக்கிறார்கள். குடும்ப வறுமையே  ரத்த சோகைக்கு முக்கிய காரணம். அரசாங்கங்கள் கடைபிடிக்கும் பொருளாதார கொள்கைகளே வறுமைக்கு காரணமாக உள்ளன” என்றார். “கொரோனா தொற்று காலத்தில்  பல லட்சம் பெண்கள் வேலை, வரு மானத்தை இழந்துள்ளனர். இந்த நிலையில், ஒன்றிய அரசு உணவு மானியத்தை குறைத்துள்ளது. இது வறுமையை மேலும் அதிகரிக்கும். ஆகவே, அரசியல் பொருளாதார, சமூக பிரச்சனைகளை முன் வைத்த போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்” என்றும் அவர் கூறி னார். இந்நிகழ்வில் மருத்துவர் நிவேதிதா காமராஜ், மருத்துவர் மகே ஸ்வரி, மாதர் சங்க மாவட்டச் செய லாளர்கள் ம.சித்ரகலா (தென் சென்னை), வி. தனலட்சுமி (மத்திய  சென்னை), மாநிலக்குழு உறுப்பி னர்கள் ஜி. மஞ்சுளா, எஸ். மனோன் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வையொட்டி உறுதி மொழியேற்பும் நடை பெற்றது.