சென்னை, பிப். 25- ராஜஸ்தான் அரசைப் போன்று, தமிழக அரசும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஓய்வூதியர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில நிர்வாகிகள் கூட்டம் வியாழ னன்று (பிப்.24) சென்னையில் நடைபெற்றது. துணைத் தலை வர் எஸ்.எஸ். சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் எஸ்.ஜெகதீசன், பொருளாளர் ஏ.பழனி, துணை பொதுச் செயலாளர்கள் பாலசுப்ரமணி யன், ராமநாதன், பிச்சைராஜன், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், ராஜஸ்தான் மாநில அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. எனவே, திமுக அரசு தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, 1.4.2003க்கு பிறகு மின் வாரியப் பணியில் சேர்ந்தவர் களுக்கு அமல்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண் டும். போக்குவரத்து ஓய்வூதி யர்களுக்கு பஞ்சப்படி வழங்குவ தோடு, மின் வாரிய ஓய்வூதியர்க ளுக்கு கடந்த 8/98 இல் ஏற்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பஞ்சப்படி தொடர்ந்து வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு சாதக மாக நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகளை எதிர்த்து மேல் முறை யீடு செய்வதை கைவிட வேண்டும். ஓய்வூதியர் கோரிக்கை களை தீர்வு காண்பது, ஓய்வூதி யர்களுக்கு பணப்பயன்களை வாரிய நிதியிலிருந்து வழங்க அரசு நிதி ஒதுக்க வேண்டும். மார்ச் 15 போராட்டம் ஓய்வூதியர்களின் நிலுவை யில் உள்ள கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி பிப்.15 அன்று மாநில முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். பொதுத் துறை களை பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28,29 தேதிகளில் நடை பெறும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.