சென்னை, ஜுன் 28 - வடசென்னையில் உள்ள ஆலை களில் வெளியேறும் அபாயகரமான நச்சுப்புகையையும் கழிவுகளையும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டத்தில் வலி யுறுத்தப்பட்டது. “வடசென்னையின் வளர்ச்சிக்கு 1000 கோடி, பூர்த்தி செய்யுமா வட சென்னையின் தேவையை” என்ற முழக்கத்தை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வடசென்னையின் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்த கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் ஆர்.கே.நகரில் செவ் வாயன்று (ஜூன் 27) நடைபெற்றது. வடசென்னை பகுதியில் உள்ள சாலைகளை விரிவுபடுத்தி தரமாக அமைத்து போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ராயபுரத்தில் உள்ள ரயில் நிலையத்தை 3ஆவது முனையமாக மாற்ற வேண்டும், அரசு பொது மருத்து வமனை ஒன்றை வடசென்னையில் உருவாக்க வேண்டும், அரசு கலைக் கல்லூரி, சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும், தொழிற்பேட்டை நகரமாக, தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக விளங்கக் கூடிய வடசென்னையில் பொறியியல் கல்லூரிகளை உரு வாக்க வேண்டும். ஆலைகளில் வெளி யேறும் அபாயகரமான நச்சுப் புகையை யும், கழிவுகளையும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், டி.கே.சண்முகம், அ.விஜயகுமார், ஆர்.ஜெயராமன், எஸ்.பாக்கியலட்சுமி ஆகியோர் பேசினர். மாமன்ற உறுப்பினர் பா. விமலா நன்றி கூறினார். முன்னதாக பகுதிச்செயலாளர் வி.ரவிக்குமார் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன் தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.