சென்னை, ஜூலை 31 - ஒன்றிய அரசின் பள்ளிக்கல்வி பாடத் திட்ட கருத்து கேட்புக்கு தமிழக அரசு ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும் என்று மேனாள் துணை வேந்தர் எல்.ஜவகர் நேசன் வலியுறுத்தி உள்ளார். இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட 27வது மாநாடு ஞாயிறன்று (ஜூலை 31) தாம்பரத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து சவீதா பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் முனை வர் எல்.ஜவகர்நேசன் பேசியதன் சுருக்கம் வருமாறு: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சர்வாதிகாரியான `ஹிட்லர் உருவாக்கிய தேசிய கல்விக் கொள் கைக்கும், ஒன்றிய அரசின் கல்விக் கொள்கைக்கும் எந்த வேறுபாடும் இல்லை. ஆட்சியாளர்கள் அவர்க ளது கொள்கைக்கு ஏற்ற மக்களை உருவாக்கும் வகையில் கல்விக் கொள்கையை வடிவமைக்கின்றனர்
கேரளாவில் ஒரு தனியார் பல்கலைக் கழகம் கூட இல்லை. ஆனால் தமிழகத்தில சுமார் 30 தனியார் பல்கலைக் கழகங்கள் உள்ளன. கல்வி வியாபாரமய மாக்கப்பட்டதன் விளைவாக இவ்வ ளவு பல்கலைக் கழகங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தரவுக ளில் (டேட்டா) முறைகேடு செய்தே சிறந்த கல்வி நிலையங்களாக விளம்பரப்படுத்திக் கொள்கின்றன. தனியார் மற்றும் அரசு சார்ந்த பல்கலைக் கழகங்களின் துணை வேந்தராக பணியாற்றியதால் இதனை உறுதியாக கூறுகிறேன். இந்த பல்கலைக் கழகங்களில் 90 விழுக்காடு நேரடியாக ஒன்றிய அரசின் கட்டிப்பாட்டில், அவற்றின் கொள் கையை, தத்துவத்தை செயல்படுத்து கின்றன. மக்களுக்கு சொந்தமான அரசு நிலத்தை ஆக்கிரமித்து உருவான இந்த கல்வி நிலையங்க ளில் மாநில அரசு தலையிட முடியாது. தமிழ்நாடு கல்வியை வியாபார மயமாக்கியதில் முதலிடத்தில் உள்ளது. இங்கு பல்கலைக் கழகம் வைத்திருப்பவர்கள் பிற மாநிலங்க ளுக்கும் சென்று கொள்ளையடிக் கின்றனர்.
கல்வி என்ற பண்பிற்கு எதிராக....
கல்வி வியாபாரமயமானதன் விளைவே ஸ்ரீமதி போன்றோர் இறப்புக்கு காரணமாக உள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை பெற்றோரின் நிலையிலிருந்து கண்டித்து கற்பிக்கின்றனர். ஆனால், தனியார் கல்வி நிறுவனங்கள், தங்களின் வியாபாரத்தை பெருக்கு வதற்காக மாணவர்களிடம் திணித்து கற்பிக்கின்றனர். கல்வி என்ற தத்து வத்திற்கு; பண்பிற்கு எதிராக கல்வி வியாபாரிகள் செயல்படுகின்றனர். தனியார் கல்வி நிலையங்களில் தகுதி, தரம் என எதுவும் கிடையாது. எனவே தான், எனது பிள்ளையை அரசு கல்லூரி யில் சேர்க்க உள்ளேன்.
குடும்ப வியாபாரம்
தனியார் பல்கலைக் கழகம் என்ற பெயரில் குடும்ப வியாபாரம் நடத்துகின்றனர். 2009ம் ஆண்டு பேராசிரியர தான்டன் குழு 44 பல்கலைக் கழகங்களின் அங்கீ காரத்தை ரத்து செய்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்று எல்லோரையும் திருப்தி படுத்தி மீண்டும் ‘ஏ’ கிரேடு சான்றிதழ் பெற்று பல்கலைக் கழகங்களை திறந்து விட்டனர். இதில் 20 பல்கலைக் கழகங்கள் தமிழகத்தில் உள்ளன. தேசிய தர நிர்ணய குழுவில் (என்ஏஏசி) ஆய்வுக்கு செல்லும்போது எந்த தனியார் பல்கலைக் கழகத்திற்கும் பி+ கிரேடுக்கு மேல் சான்று அளித்த தில்லை. எனது நண்பர்கள் ஆனந்த் டெல்டும்டே, தீஸ்தா செதல்வாட் போன்றே என்னையும் உள்ளே கொண்டு செல்வார்கள் என்று தெரிந்து தான் இவற்றையெல்லாம் கூறுகி றேன்.
களவாணித்தனம்
அரசும், தனியாரும் சேர்ந்து கூட்டுக் களவாணித்தனம் செய்து மக்களுக்கு கல்வியை எட்டாத தூரத்திற்கு கொண்டு செல்கின்றனர். மக்களுக்கு கல்வி சேவை அளிப் பதற்கே அரசு உதவி பெறும் கல்லூரி கள் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் சுயநிதி பாடப்பிரிவுகளை எதற்காக அனுமதிக்க வேண்டும்? டி.பி.ெஜயின் கல்லூரி விவகாரத்தி லும் அதுதான் நடக்கிறது. 2 வருடமாக ஒரு அரசு உதவி பெறும் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை நடத்தாமல் உள்ளது. 3 ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்தாவிடில், அது தனியார் கல்லூரியாக மாறிவிடும். இதுகுறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பாதது ஏன்? இந்த முறைகேட்டிற்கு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். தேசிய கல்விக் கொள்கை வந்த பிறகு இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. இது மேலும் அதிகரிக்கும்.
தமிழக அரசு கேள்வி எழுப்ப வேண்டும்
உயர்கல்வியை தொடர்ந்து, பள்ளிக்கல்வி பாடத்திட்டத்திற்கான வரைவு அறிக்கையை அமித்ஷா வெளியிட்டுள்ளார். தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிட்டுள்ளபடி இந்தியாவின் பாரம்பரிய கலாச்சார, கலைகளை கற்பிக்க உள்ளனர். இதனை தமிழக அரசு எதிர்க்காமல் மவுனம் காப்பது ஏன்? அண்மைக் காலமாக கல்வி சார்ந்த பிரச்சனைகளில் மாணவர்கள் ஆதரவற்றவர்களாக விடப்படுகின்ற னர். மக்களை திரட்டி இவற்றை எதிர்த்து போராடுவதை தீவிரப்படுத்த வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கவில்லை என்றால் மனித சமூகத்திலிருந்தே கல்வி அகற்றப்பட்டுவிடும். ஆளும் வர்க்கம், சுதந்திர சந்தை, முதலாளி கள், மேல்தட்டினர் ஆகிய 4 பேரும் சேர்ந்து கல்வியை சமூகத்திலிருந்து பிரித்து விடுவார்கள். ஏழை எளிய மக்களுக்கு கல்வி கிடைக்காது. ஆட்சியாளர்களுக்கும் இவர்களுக்கு ஆதரவாக செயல் படுவார்கள். இந்த 4 பிரிவினரும் கல்விக்கு எதிரிகள். பெரும்பான்மை யான மக்கள் கல்வி பெற மக்களை திரட்டி போராடுங்கள். அந்த பேரியக்கத்திற்கு பின்னால் கல்வி யாளர்கள் இருப்போம். இதற்கான முயற்சிகளை இந்திய மாணவர் சங்கம் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.