சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒடுக்கப்பட்ட பெண்ணின் மீது தாக்குதல் நடத்திய தீட்சிதர்களை கைது செய்ய வலியுறுத்தியும், சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாட அனுமதி அளிக்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிதம்பரம் வடக்கு வீதியில் நகரச் செயலாளர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் மூசா, செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் முத்துக்குமார், ஜெயசித்ரா. நகர் குழு உறுப்பினர்கள் சங்கமேஸ்வரன், ராமமூர்த்தி, ஜின்னா, மல்லிகா, அஷ்ரப் அலி, குமரவேல், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.