ஈரோடு, செப். 29 - தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளான சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதாவது தமிழ்நாட்டி லிருந்து கர்நாடகா பகுதிகளுக்கு யாரையும் உள்ளே செல்ல அனு மதிக்கவில்லை. தமிழ்நாடு பதிவெண் கொண்ட வண்டிகளை எல்லையிலேயே தடுத்து நிறுத்தி னர். இந்நிலையில், கர்நாடக மாநிலம் சிக்கலோ அருகே உள்ள கங்கவாடி கிராமத்தில் விவசாயம் செய்து வருபவர் பழனிசாமி. இவர் உடல்நலக் குறைவு காரணமாக வெள்ளியன்று காலை உயிரி ழந்தார். பழனிசாமியின் மகன், மகள் மற்றும் உறவினர்கள் தமிழ்நாட்டின் சத்தியமங்கலத்தில் பணிபுரிந்து வருகின்றனர். பழனிசாமி மறைவு குறித்துத் தகவ லறிந்த பழனிசாமியின் மகள், மகன், மாமனார், பேரன் உற வினர்கள் என 50-க்கும் மேற்பட் டோர் 5 வாகனங்களில் சத்தியமங் கலத்திலிருந்து கர்நாடகா நோக்கிச் சென்றுள்ளனர். அவர்கள் சென்றது தமிழகப் பதிவு கொண்ட வாகனம் என்பதால் காரப்பள்ளம் சோதனை சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து சத்திய மங்கலம் எல்லையான அடர்ந்த காட்டுப் பகுதியில் காலை 7 மணியிலிருந்து 11 மணி வரை உணவு, குடிநீர் மற்றும் இயற்கை உபாதைகளைக்கூட கழிக்க முடி யாமல் நீண்ட நேரமாகக் காத்தி ருந்தனர். மேலும் தந்தையின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் கெஞ்சியுள்ள னர். ஆனால் போலீசார் பாது காப்பு கருதி அவர்களைப் போக விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்பிறகு தமிழ்நாடு அரசு துரிதமாகச் செயல்பட்டு, ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளர் ஜவக ருடன் கலந்து ஆலோசித்து பாது காப்புடன் அவர்களைக் கர்நாடகா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தது. இதனையடுத்து போலீசார் தமிழக பதிவு கொண்ட 5 வாகனங் களில் பாதுகாப்புடன் புழிஞ்சூர் சாதனை சாவடி வழியாக அவர் களை கங்கவாடிக்கு அனுப்பி வைத்தனர்.