tamilnadu

img

சர்க்கரை வியாதி, ரத்த அழுத்த மாத்திரைகள் விலை கடும் உயர்வு

சென்னை,ஏப்.1- மருந்து-மாத்திரை கள் விலை உயர்த்தப்பட் டுள்ளதால் 850 வகையான மருந்துகள் விலை 10  விழுக்காடு வரை அதிகரித் துள்ளது. பாரசிடமால் மாத்திரை  முதல் விலை உயர்ந் துள்ளது. அது மட்டுமல்லா மல் பாரசிடமால் கலந்துள்ள அனைத்து வகை  மருந்துகளும் விலை உயர்ந்துள்ளது.  அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் ஆயிரக்கணக் கான மருந்துகள், உயிர்காக் கும் மருந்துகள் உள்ளன. இது தவிர சர்க்கரை வியாதி,  ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சினைகள் போன்ற நாள்பட்ட வியாதிகளுக்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டிய கட்டாய சூழ்நிலையில் லட்சக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். அத்தகை யோருக்கு மாதம் குறைந்த பட்சம் ரூ.1000 வரை கூடுதல்  செலவாகும். உயிர்காக்கும் ஏராள மான மாத்திரைகளும் கட்டுப்பாடு இல்லாமல் விலை உயர்த்தப்பட் டுள்ளது. இது சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கும். உதாரணமாக புற்று நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ஒரு ஊசியின்  விலை சுமார் 4 ஆயிரம் ரூபாயிலிருந்து ரூ.16 ஆயிரம்  அதிகரித்துள்ளது.  இதே போல் உயிர் காக்கும் பல மருந்துகள் விலை ஆயிரக்கணக்கில் உள்ளது. அவைகள் மேலும் விலை உயர்த்தப் பட்டுள்ளதால் நோய் தாக்கி பெருளாதாரத்தை இழந்து நெருக்கடிக்குள் தவித்து கொண்டிருக்கும் லட்சக் கணக்கான குடும் பங்க ளுக்கு சுமையாகவே இருக் கும். மருந்துகள் தயாரிப்பு,  விற்பனையை பொறுத்த வரை உற்பத்தி செலவை விட  பல மடங்கு கூடுதல் விலை  நிர்ணயித்து விற்கப்படு கிறது.