பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்
பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு
பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் செவ்வாயன்று ஈரோட்டில் தோழர் ஏ.எம்.காதர் நினைவரங்கில், மாநிலத் தலைவர் கே.முகமதலி தலைமையில் நடைபெற்றது. இதில், பொதுச் செய லாளர் பி.பெருமாள், பொருளாளர் ஏ.எம்.முனுசாமி, துணை தலைவர்கள் என்.செல்லதுரை, எம்.சிவாஜி, செயலா ளர்கள் வெண்மணி சந்திரன், எஸ்.தீர்த்தகிரி மற்றும் ஈரோடு மாவட்டச் செயலாளர் சி.பெரியசாமி உள்ளிட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னம் வருமாறு : தற்போது தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்கள் ஆரம்ப சங்கங்கள் தொடர்ந்து செயல்பட முடியாத அள விற்கு நெருக்கடிகள் உருவாகி யுள்ளன. ரூ.100 கோடிக்கு மேல் பால் உற்பத்தியாளர்களுக்கு பாலுக்கான தொகையும், ஊக்கத் தொகையும் பாக்கி உள்ளது. உடனடியாக தமிழ்நாடு அரசு தலையிட்டு பிரச்ச னையைத் தீர்த்திட வேண்டும். ஆவின் மூலம் தற்போது தினம் சுமார் 3.75 லட்சம் குடும்பங்கள் சுமார் 30 லட்சம் லிட்டர் பால் வழங்குகிறார்கள். மற்ற வர்கள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குகிறார்கள். ஆவின் நிறுவனம் வழங்குகிற கொள்முதல் விலையை யொட்டியே தனியார் நிறுவனங்க ளும் கொள்முதல் விலை தீர்மா னிக்கிறார்கள். 2022 நவம்பரில் தமிழ்நாடு அரசு சத்து அடிப்படையில் 1 லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியது, பால் உற்பத்தியாளர்க ளின் தொடர்ச்சியான போராட்டங்க ளுக்குப் பின் தமிழ்நாடு முதலமைச்சர் ஊக்கத் தொகையாக 1 லிட்டருக்கு ரூ.3ஐ 2023 டிசம்பரில் அறிவித்தார். தற்போது கால்நடை தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தனியார் நிறுவனங்களில் 1 லிட்ட ருக்கு ரூ.40க்கும் கூடுதலாகவே கிடைக்கிறது. இதனால் ஆவினுக்கு தற்போது பால்வரத்து குறைந்து கொண்டு வருகிறது. கடந்த 4 வருடங்களுக்கு முன் ஆவி னுக்கு சுமார் 4.80 லட்சம் குடும்பங்கள் பால் வழங்கினார்கள். இக்காலத்தில் சுமார் 1 லட்சம் குடும்பங்கள் ஆவினி லிருந்து பிரிந்து தனியாருக்கு வழங்கு கிறார்கள். எனவே, உடனடியாக தமிழ்நாடு அரசு தலையிட்டு கொள்முதல் விலையில் 1 லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி லிட்டருக்கு ரூ.45 ஆக கொடுக்க வேண்டும். தீவனங்க ளை 50% மானிய விலையில் வழங்க வேண்டும். ஆவினில் நிர்வாக சீர்திருத்தம் செய்து, செலவினங்க ளைக் குறைத்திட வேண்டும். உயர்நீதி மன்றத் தீர்ப்பினை அமல்படுத்திட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை அமல்படுத்தக் கோரி வருகிற 18.03.2025 அன்று மாவட்டங்களில் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டங் களை நடத்திட கூட்டத்தில் முடிவெ டுக்கப்பட்டது.