அனைவருக்கும் சமமான பணி வழங்க கோரிக்கை
தமிழ்நாட்டில் 12 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு பெற்ற நிலையில், தற்போது பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடந்து வருகிறது. பொதுத் தேர்வு முடிவடைந்த நிலையில், 12 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்ததும் அதற்கான பணிகள் தொடங்கப்படும். இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் மதிப்பீட்டு பணி களில் பாரபட்சம் காட்டப்படுவதாக ஆசிரியர்கள் குற்றச் சாட்டை முன்வைக்கின்றனர். அதாவது, 12 ஆம் வகுப்பிற்கு ஒரு நாளைக்கு 24 விடைத்தாள்கள் திருத்த அறிவுறுத்தப் பட்ட அதே நேரத்தில், பத்தாம் வகுப்பை பொறுத்த வரையில் 30 விடைத்தாள்களை திருத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, 12 ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு விடைத்தாள்களை திருத்தக் கூடிய ஆசிரியர் களுக்கான ஊதியத்தில் பாரபட்சம் காட்டப்படுவதாக அவர்கள் வேதனையோடு தெரிவித்துள்ளனர். எனவே ஆசிரியர்களுக்கு விடைத்தாள்கள் மதிப்பீட்டு பணிகளி லும், அதற்கான ஊதியம் வழங்குவதிலும் பாரபட்சம் காட்டாமல், அனைவருக்கும் சமமான வகைகளில் பணிகள் வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
தட்கல் ரயில் புக்கிங் நேரம் மாற்றம்? ஐஆர்சிடிசி விளக்கம்
சென்னை, ஏப்.11- தட்கல் ரயில் டிக்கெட் புக்கிங் நேரம் மாற்றம் செய்யப் பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் சில செய்திகள் பரவு கின்றன. அதில் உண்மையில்லை என இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் இதுகுறித்து ஐஆர்சிடிசி (IRCTC) எக்ஸ் தள பக்கத்தில், “தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட்டு களுக்கான வெவ்வேறு நேரங்கள் குறித்து சமூக வலை தளத்தில் சில பதிவுகள் பரவி வருகின்றன. ஏசி அல்லது ஏசி அல்லாத வகுப்புகளுக்கான தட்கல் அல்லது பிரீமியம் தட்கல் முன்பதிவு நேரங்களில் தற்போது அத்தகைய மாற்றம் எதுவும் முன்மொழியப்படவில்லை. முகவர்களுக்கு அனு மதிக்கப்பட்ட முன்பதிவு நேரங்களும் மாறாமல் உள்ளன” என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.