tamilnadu

img

மார்க்சிய லட்சியத்திற்காக வாழ்ந்தவர் டி.எஸ்.பாலு: தலைவர்கள் புகழாரம்

சென்னை, அக். 22- மார்க்சிய லட்சியத்திற்காகத் தனது இறுதி மூச்சு வரை வாழ்ந்தவர் கோட்டி பாலு என்று தலைவர்கள் புகழாரம் சூட்டினர். மின் ஊழியர் மத்திய அமைப்பில் பணியாற்றி ஓய்வுபெற்ற கோட்டி பாலு (எ) டி.எஸ்.பாலசுப்பிரமணியம் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி தீக்கதிர் சென்னை பதிப்பு  அலுவலகத்தில் புகழஞ்சலி செலுத்தும்  கூட்டம் பொறுப்பாசிரியர் அ.விஜய குமார் தலைமையில் சனிக்கிழமை (அக். 22) நடைபெற்றது. மூத்த தலைவர் வே.மீனாட்சி சுந்த ரம் அவரது உருவப் படத்தைத் திறந்து வைத்துப் பேசுகையில், மின் வாரியத்தில் மூத்த வேதியியல் அதிகாரியாக நேர்மையாக செயல் பட்டவர்.  அனல் மின்நிலையங்களுக்கு நிலக்கரி கொள்முதலில் நடைபெறும் ஊழல்களைத் தடுப்பதில் முக்கிய பங்காற்றியவர் என்றார். பத்திரிகையாளர் சமஸ் பேசுகை யில், பன்மைத்துவத்துடன் செயல்பட்ட பாலு, குடும்பத்திலும் பன்மைத்து வத்துடன் நடந்து கொண்டார். அனைத்து விஷயங்கள் குறித்தும் உரையாடுவார். தவறு என்றால் அதை  முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொண்டவர். சமூக அதிகாரத் திற்காகவோ, வருமானம் ஈட்டவோ  நினைத்ததில்லை. இறுதிவரை தான் ஏற்றுக் கொண்ட லட்சியத்திற்காகப் பாடுபட்டவர். அனைவரிடத்திலும் தன்னம்பிக்கையை விதைக்கக் கூடியவர் என்றார். மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் செயல் தலைவர் எம்.துரைபாண்டியன் பேசுகையில், ஒரு மார்க்சிஸ்ட் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தார். மனதில் பட்டதைத் தைரியமாகக் கூறு பவர். சகிப்புத்தன்மையை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கி ணைப்பாளர் க.உதயகுமார் பேசுகை யில், வயது வித்தியாசமின்றி அனை வரிடமும் அரசியல் விவாதம் செய்து  கொண்டே இருப்பார். அண்ணன் தம்பி யாகப் பழகக் கூடியவர். தவறுகளை உரிமையோடு சுட்டிக்காட்டுவார். தீக்கதிர் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி யவர் என்றார்.   மின் ஊழியர் ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநிலத் தலைவர்  எஸ்.எஸ்.சுப்பிரமணியன் பேசுகை யில், மின் வாரியத்தில் 1970ஆம் ஆண்டுதான் சிஐடியு சங்கம் உருவாக்கப்பட்டது. ஆனால் 1967ஆம் ஆண்டே மின்வாரியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளையை நிறுவி  கிளைச் செயலாளராக செயல்பட்ட வர். சிபிஎம் கிளைச் செயலாளர் பொறுப்பைத் தவிர வேறு எந்த பொறுப்பும் வகிக்காதவர். ஆனால் வாரியத்தின் தாக்குதலுக்கு ஆளாகும் முதல் நபராக அவர்தான் இருப்பார். படிப்பறிவில்லாத தொழிலாளர்களை அரசியல்படுத்தி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வைத்தவர் பாலு என்றார்.  மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலப் பொருளாளர் வெங்கடேசன், தீக்கதிர்  இடைக்கமிட்டி செயலாளர் உஷா, தலைமை நிருபர் ஸ்ரீராமுலு, விளம்பர பிரிவு ராமகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன் மகன் சாய் கிருஷ்ணன் ஆகியோரும் பேசினர். முன்னதாக சி.கல்யாணசுந்தரம் வரவேற்றார். உதவி ஆசிரியர் ம.மீ.ஜாபர் நன்றி கூறினார். இதில் மின்  ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத்  தலைவர் தி.ஜெய்சங்கர் தீக்கதிர் ஊழி யர்கள், பாலு குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.