tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஈரான் மீது சைபர் தாக்குதல்

தெஹ்ரான்,ஜூன் 18- ஈரானிய வங்கி செயல்பாடுகளை முடக்கும் வகையில் இஸ்ரேல் தரப்பு சைபர் குழு ஒரு மிகப்பெரிய சைபர் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.     இந்நிலையில் ஈரான் குடிமக்கள் அனைவரும் அமெரிக்க நிறுவன செயலியான வாட்ஸ்அப் செயலியை உடனடியாக தங்கள் கைபேசியில் இருந்து நீக்க வேண்டும் என வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. அந்த செயலி மூலமாக பெறப்படும் தகவல்களை திருடுவது, உளவு பார்ப்பது மூலம் அந்நிறுவனம் இஸ்ரேல் உளவுத்துறைக்கு உதவி செய்யும் என்ற அச்சத்தின் காரணமாகவும் பொது மக்களின் பாதுகாப்பிற்காகவும் இந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.     இந்த அறிவிப்புக்கு வாட்ஸ் அப் நிறுவனம் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.  

வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் இஸ்ரேலிடம் குறைவாக உள்ளன அமெரிக்க பத்திரிகை தகவல்

நியூயார்க், ஜூன் 18-   இஸ்ரேலிடம் ஏவுகணை தடுப்பு அமைப்புகள் குறைவாக இருப்பதாக அமெரிக்கப் பத்திரிகை ஒன்று அறிக்கை வெளி யிட்டுள்ளது.இந்த நிலை ஈரானில் இருந்து ஏவப்படும் நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலின் திறனை மேலும் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த தகவலை முக்கிய ராணுவ அதிகாரி ஒருவர் அப்பத்திரிகைக்கு தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சூழல் குறித்து அமெரிக்கா பல மாதங்களுக்கு முன்பே அறிந்திருந்தது எனவும் இதனால் தொடர்ந்து தரை, கடல், வான் பரப்பு பாதுகாப்பு சாதனங்களை நிறுவி இஸ்ரே லின் பாதுகாப்பை அதிகரித்து வருவதாகவும் அவர் கூறி யுள்ளார்.