வாடிக்கையாளர்கள் மறியல் போராட்டம்
விருதுநகர், மே 28- விருதுநகரில் தனியார் நிதி நிறுவனத்தின் மோசடி யைக் கண்டித்தும் விரை வாக பணத்தை திரும்ப வழங் கிடக் கோரியும் வாடிக்கை யாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மீனாம் பிகை பங்களா அருகே குவாலியரை தலைமையிட மாக கொண்ட தனியார் நிதி நிறுவனத்தின் கிளை இய ங்கி வந்தது. இந்நிறுவனம், அதிக வட்டி கொடுப்பதாக அறிவிப்புகள் வெளியிட்டது. இதை நம்பி 10 ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் மாதந் தோறும் குறிப்பிட்டத் தொகை யை தவணையாக செலுத்தி யுள்ளனர். இந்நிலையில், கடந்த 2014 மே மாதம் இந்நிறு வனம் மூடப்பட்டது. இத னால், பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் ஏமாற் றமடைந்தனர். எனவே, காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நிதி நிறுவ னத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத் தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அந்நிறுவனத்தின் சொத்துக்களை சிபிஐ பறி முதல் செய்து, பாதிக்கப் பட்டோருக்கு செலுத்திய தொகையை திருப்பி வழங்க வும் நீதிமன்றம் உத்தர விட்டது. இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் தனியார் நிதி நிறுவனத்தின் சொத்துக் களை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், விருது நகர் வட்டாட்சியர் அலுவல கத்தில் சென்னை சிபிஐ ஆய் வாளர் தினேஷ் தலைமை யிலான சிபிஐ அதிகாரிகள் பாதிக்கப்பட்டோரிடம் ஆவ ணங்களை சரிபார்த்தனர். இத்தகலறிந்து 500க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்த னர். இதனால், பெரும் பர பரப்பு ஏற்பட்டது. காலதாம தம் ஏற்படவே வாடிக்கையா ளர்கள் மதுரை- விருதுநகர் 4 வழிச் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இத னால் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த விருதுநகர் மேற்கு போலீஸார் சமாதானம் செய்து வட்டாட்சியர் அலுவ லகத்திற்கு அழைத்து வந்த னர்.