tamilnadu

img

குற்றவாளிகளின் சொர்க்கமாக மாறிவிட்டது மேற்குவங்கம் கேள்விக்குறியாகி வருகிறது சட்டம் - ஒழுங்கு

ஹன்ஸ்காலி (மேற்கு வங்கம்), ஏப்.21 - ‘மேற்குவங்க மாநிலம் ஹன்ஸ்காலியில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில்  முக்கியக் குற்றவாளியான சோஹைல் மற்றும்  அவரது தந்தையும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான சமர் கயாலி உட்பட  சந்தேகத்திற் குரிய அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்குவங்க மாநிலச் செயலாளர் முகம்மது சலீம் வலியுறுத்தியுள்ளார். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பத்தைக் கண்டித்தும். குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் ஹன்ஸ்காலியில் திங்களன்று கண்டனப் பேரணி நடைபெற்றது. இதில்  மாநிலச் செயலாளர் முகம்மது சலீம் கலந்துகொண்டார். முன்னதாக சிறுமியின் பெற்றோரைச் முகம்மது சலீம் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முகம்மது சலீம்,  “மேற்கு வங்காளத்தில்  பலாத்கார சம்பவ ங்கள் தொடர்கின்றன. இதற்கு பொறுப்பற்ற காவல்துறை அதிகாரிகளும், முதல்வர் மம்தா பானர்ஜியும் தான் காரணம்.  காவல் நிலையங்களுக்குப் பொறுப்பான பெரும்பாலான அதிகாரிகள் “பொறுப்பற்றவர்கள்” .

காவல்  கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரி களும்  இதற்கு விதிவிலக்கல்ல” என்றார்.  இறப்புச்  சான்றிழ் இல்லாமல் அல்லது உடற்கூராய்வு செய்யாமல் அதன் அறிக்கை இல்லாமல் துப்பாக்கி முனையில் சிறுமியின் உடலை எடுத்துச் சென்று தகனம் செய்த நிர்வா கத்தின் நிலையைச் சுட்டிக்காட்டி, காவல்துறை க்கே இது தெரியாமல் போனது தான் அதிர்ச்சி யளிப்பதாய் உள்ளது எனக் கூறிய சலீம்,  உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல்நிலையம் சென்று புகாரளிக்க முடிய வில்லை. ஏன் அதற்குப்பின்னர் ஏப்ரல் 10-ம் தேதி  வரை சிறுமியின் பெற்றோரால்  புகார் அளிக்க முடியவில்லை. மேற்குவங்கத்தின் சட்டம் ஒழுங்கு நிலை இதுதான். சிறுமியின் மரணம் குறித்துக் கூறிய மம்தா பானர்ஜி‘ சிறுமியும் இளைஞரும் ஒருவரை யொருவர் அறிந்தவர்கள் என்கிறார்.

அப்படி யென்றால் எந்தப் பெண்ணும் எந்த ஆணுடனும் பேசக்கூடாது என்று அர்த்தமா அல்லது வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று அர்த்தமா? முதல்வர், இறந்து போன சிறுமி குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். ஆனால் மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்படவில்லை. குற்றவாளிகளின் சொர்க்கமாக மாநிலத்தை அவர் மம்தா மாற்றியுள்ளார். இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால் வங்க மக்கள் முதல்வரை மன்னிக்கமாட்டார்கள் என்றார். சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள வழக்குகளின் நிலை என்ன என்று  கேட்டதற்கு,  பதிலளித்த முகம்மது சலீம், கடந்த சில ஆண்டுகளாக சிபிஐ-யிடம் பல வழக்குகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆனால் எதிலும் எந்த முடிவும் எட்டப்படவில்ல என்றார். இதற்கிடையில் பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக  சோஹைலின் நண்பர்களில் ஒருவரான ரஞ்சித் முல்லிக்கை சி‘பிஐ ராணா காட்டில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. முல்லிக்கை 12 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.