சிபிஎம் மூத்த தோழர் சா. ஜீவபாரதி மறைவு மாநில செயற்குழு இரங்கல்
சென்னை, ஜூன் 24 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் சா. ஜீவபாரதி (வயது 70)மறைவுக்கு, கட்சியின் மாநில செயற்குழு இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள இரங்கல் அறிக்கை வருமாறு: தோழர் ஜீவபாரதி அவர்கள் உடல்நலக் குறைவின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீ ரென்று காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவரது மறைவுக்கு கட்சியின் மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராக தொழிற்சங்க தலைவராக, எழுத்தாளர் சங்கத்தினை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியவர் தோழர் ஜீவபாரதி. 1988-இல் தஞ்சை மாவட்டம் பிரிந்ததற்கு பிறகு, தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினராக, சிஐடியு மாவட்டச் செயலாளராக பணியாற்றி யவர். தஞ்சை மாவட்டத்தில் போக்கு வரத்து தொழிலாளர் சங்கத்தை உரு வாக்குவதில் மகத்தான பங்கை ஆற்றி யவர். கிராமப்புற மற்றும் நகர்புற தொழி லாளர்களை அணிதிரட்டுவதில் முக்கிய பங்காற்றியவர். பன்முக திறமை வாய்ந்த வர், ‘மாப்பிள்ளை கடை’ என்ற புகழ்பெற்ற நாடகத்தை எழுதி இந்தியா வில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடு களிலும் நடத்துவதற்கு காரணமானவர் தோழர் சா. ஜீவபாரதி. தஞ்சை மாவட்டத்தில், தமிழகத்தின் புகழ்பெற்ற திருபுவனம் பட்டுக் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றினார். கட்சி கேட்டுக்கொண்டதற்கிணங்க உடனடி யாக முழு நேர ஊழியராக தன்னையே ஒப்படைத்துக் கொண்டு செயல்பட்டவர். தற்போது தஞ்சை மாவட்டத்தின் மாவட்டக்குழு உறுப்பினராகவும், சிஐடியு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவ ராகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் சங்கத்தின் மாவட்ட தலைவராகவும் செயல்பட்டுக் கொண்டிருந்தார். தோழர் ஜீவபாரதி அவர்களுடைய மறைவு நம் இயக்கத்திற்கும் உழைக்கும் மக்களுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது மனைவி வசந்தா மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் கட்சி தோழர்களுக் கும் கட்சியின் மாநில செயற்குழு அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது. தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோரும் தோழர் சா.ஜீவபாரதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.