tamilnadu

img

பாஜக-இந்து முன்னணியை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

பாஜக-இந்து முன்னணியை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜுன் 22-  திண்டுக்கல்லில் நடைபெற்ற சிபிஎம் பிரச்சாரத்தில் புகுந்து, தாக்குதல் நடத்திய இந்து முன்னணி, பாஜக குண்டர்களை கைது செய்ய வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டம், குடவாசல், நன்னிலம் ஒன்றியங்களின் சார்பாக சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் குடவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.லெனின் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. சுந்தரமூர்த்தி கண்டன உரையாற்றினார்.  இதில், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.லெட்சுமி, பா. சுகதேவ் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், வர்க்க வெகுஜன அரங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  நன்னிலம் பேரளத்தில் சிபிஎம் நகரச்செயலாளர் ஜி.செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வீரபாண்டியன், நன்னிலம் ஒன்றியச் செயலாளர் தியாகு.ரஜினிகாந்த் ஆகியோர் உரையாற்றினர்.  இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஜெ.முகமது உதுமான், கே.தமிழ்செல்வி, மற்றும் ஒன்றிய, நகரக்குழு உறுப்பினர்கள் வர்க்க வெகுஜன அரங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.  மன்னார்குடி நீடாமங்கலம் பெரியார் சிலை அருகில் ஒன்றியச் செயலாளர் ஜான் கென்னடி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி. கந்தசாமி, கே.என். ராதா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  சிஐடியு தலைவர் முனியாண்டி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, முருகேசன், காளியப்பன், ராஜா, சிஐடியு கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் பிலிப்ராஜ், தமுஎகச மாவட்ட இணைச் செயலாளர் அம்பிகாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  அரியலூர்  அரியலூர் அண்ணாசிலை அருகே, சிபிஎம் கட்சி மாவட்டச் செயலாளர் எம். இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இரா.மணிவேல், பி.துரைசாமி, டி. அம்பிகா, வி.பரமசிவம், துரைஅருணன், கே.கிருஷ்ணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர்.  ஆர்ப்பாட்டத்திற்கு தா.பழூர் ஒன்றியச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆண்டிமடம் வட்டச் செயலாளர் எம்.வேல்முருகன், செந்துறை வட்டச் செயலாளர் கு.அர்ஜுனன், அரியலூர் ஒன்றியச் செயலாளர் அ.அருண்பாண்டியன், திருமானூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.பி. சாமிதுரை உள்ளிட்டோர் ் பேசினர். மூத்த தலைவர்கள் ஆர்.சிற்றம்பலம். ஏ.சௌரிராஜன் மற்றும் கிளைச் செயலாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  நாகப்பட்டினம்  நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தாணிக் கோட்டகத்தில், நடைபெற்று ஆர்ப்பாட்டத்திற்கு வேதாரண்யம் தெற்கு ஒன்றியச் செயலாளர் வி.அம்பிகாபதி தலைமை வகித்தார். சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து கண்டன உரை ஆற்றினார்.  மயிலாடுதுறை மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.  மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ். துரைராஜ், ப.மாரியப்பன், டி.சிம்சன், ஜி.வெண்ணிலா, ஏ.ரவிச்சந்திரன், சி.விஜயகாந்த்,கே.பி.மார்க்ஸ், டி.ஜி.ரவி, அமுல் காஸ்ட்ரோ உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஒன்றியச் செயலாளர்கள், மாவட்ட, ஒன்றியக்குழு உறுப்பினர்கள்கண்டன முழக்கமிட்டனர்.   திருத்துறைப்பூண்டி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது  ஒன்றியச் செயலாளர் டிவி. காரல்மார்க்ஸ் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் கண்டன உரையாற்றினார். நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ஜி. ரகுராமன், சி. ஜோதிபாசு, கே.பி. ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர் இரா. மாலதி, எஸ். பாவனி, நகர ஒன்றியக் குழு உறுப்பினர்கள், நகர்மன்றத் துணைத் தலைவர் எம். ஜெயபிரகாஷ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.