tamilnadu

img

ஒன்றிய அரசை கண்டித்து சிபிஎம் மக்கள் சந்திப்பு பிரச்சாரம்

ஒன்றிய அரசை கண்டித்து சிபிஎம் மக்கள் சந்திப்பு பிரச்சாரம்

கரூர், ஜூன் 18 - ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத செயல்பாடு களை கண்டித்தும், சாதி, மத பிரிவினைவாத அடக்குமுறை கொள்கைகளை கைவிட வேண்டும். தமிழக அரசு மக்களின்  அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜூன் 11 முதல்  20 ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடை பெற்று வருகிறது. கட்சியின் பெரியார் நகர் கிளையின் சார்பில் பெரியார் நகர் பேருந்து நிறுத்தம் முன்பு நடைபெற்ற பிரச்சார இயக்கத் திற்கு கிளைச் செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார்.  கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.சுப்பிரமணி யன், எம்.தண்டபாணி, கே.சக்திவேல் ஆகியோர் பேசினர்.  கட்சியின் கரூர் ஒன்றியக் குழு சார்பில் வேலாயுதம் பாளையம் கடைவீதியில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு  மாவட்டக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.  மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம் ஆகியோர் பேசினர்.  கட்சியின் க.பரமத்தி ஒன்றியக் குழு சார்பில் க.பரமத்தி  கடைவீதியில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஒன்றியச் செயலா ளர் குப்பம் கா.கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டக் குழு  உறுப்பினர் கே.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன் ஆகியோர் பேசினர். ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.குமாரசாமி, எம்.சண்முகம், ஏ.ஆர். சொரணையப்பன், கிளைச் செயலாளர்கள் அன்புராஜன், ஏ. ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  கடவூர் வட்டக்குழு சார்பில் தரகம்பட்டி, மோளப்போட்டி, ரெட்டியப்பட்டி, பாலவிடுதி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற  பிரச்சாரத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினர் பி.வேல்முருகன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  கே.சக்திவேல்,  பி.ராமமூர்த்தி, வட்டச் செயலாளர் பி.பழனிவேல் ஆகியோர்  பேசினர். வட்டக் குழு உறுப்பினர்கள் பி.ரவி கண்ணன், எஸ். முத்துசாமி, ஆர்.குமார், பாலவிடுதி கிளைச் செயலாளர் எம்.  மணிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருச்சிராப்பள்ளி கட்சியின் திருச்சி மாவட்டம் மேற்குப் பகுதிக்குழு சார்பில்  நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு மேற்கு பகுதி செய லாளர் ரபிக் அஹமத் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் விஜயராஜன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சீதா, அன்வர் உசேன், பகுதிக்குழு உறுப்பினர்கள் கிளைச் செயலாளர்கள் சந்திரன், ஹரி பாஸ்கர், அப்துல் கையும்,  ஆஷிக் அலி, கணேசன், ஷேக் மொய்தீன் வேதநாயகம், வள்ளி, முருகன், அக்பர் அலி, ராஜு ஆகியோர் மத்திய பேருந்து நிலையம், கோரிமேடு, மிளகுபாறை, பெரிய மிளகு பாறை மற்றும் புத்தூர் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் செய்தனர். தா.பேட்டை ஒன்றியத்தில் 3 ஆவது நாளாக ஜெம்முநாத புரம், வாழவந்தி, தெற்கு கொட்டம், மங்கலம், மாவலிபட்டி, பைத்தம்பாறை, கிருஷ்ணாபுரம், வளையெடுப்பு, கொத்தம் பட்டி, துலையாநத்தம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் நடை பெற்றது. இந்த பிரச்சாரத்திற்கு ஒன்றியச் செயலாளர் பாண்டி யன் தலைமை வகித்தார். மூத்த தோழர் ஆர். சுப்பிரமணி யன், மாவட்டக் குழு உறுப்பினர் சந்திரமோகன், ஒன்றியக்  குழு உறுப்பினர்கள் லோகநாதன், ரெங்கராஜ், வீரவிஜயன்,  கிளைச் செயலாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் இரு சக்கர வாகனப் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர். மணப்பாறையில் பாரதியார் நகர், ஆஞ்சநேயர் நகர், உசிலை ஊரணி, முச்சந்தி, சூளியாபட்டி, கல்பாளையத் தான்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு  வட்டக் குழு உறுப்பினர் சுரேஷ் தலைமை வகித்தார். திருச்சி  புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன், மாவட்ட செயற்குழு  உறுப்பினர் சிதம்பரம், மணப்பாறை வட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், வட்டக்குழு உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முசிறி ஒன்றியத்தில் வட்டச் செயலாளர் முருகேசன் தலைமையில் தொட்டியம், வட்டக்குழு உறுப்பினர் சத்திய மூர்த்தி தலைமையில் காட்டுப்புத்தூர், மூத்த தோழர் முருகன்  தலைமையில் ஏழூர்பட்டி, முருகானந்தம் தலைமையில் பாலசமுத்திரம் ஆகிய பகுதிகளில் பிரச்சார இயக்கம் நடை பெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சந்திரன்,  சுப்பிரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர் ராமநாதன் மற்றும் தர்மலிங்கம், சின்னதுரை, சுந்தரம், மல்லிகா, தேவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் நகரம், பெரம்மையா கோவில், மதுக்கூர் பேருந்து நிலையம், முக்கூட்டு சாலை  உள்ளிட்ட பகுதிகளில் ஆட்டோவில் ஒலிபெருக்கி வைத்து,  துண்டுப் பிரசுரம் வழங்கி ஒன்றியச் செயலாளர் வை.சிதம்பரம்  தலைமையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி, மூத்த தலைவர் கள் ஆர்.சி.பழனிவேலு, ஆர்.காசிநாதன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தெ.பஞ்சாட்சரம், பி.ஜெயந்தி, ஏ.கே.எஸ்.வெற்றிச்செல்வம், பி.அமல்ராஜ், கிளைச் செயலாளர்கள் பங்கேற்றனர். கட்சியின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் முழு வதும் தொடர்ந்து நான்கு நாட்களாக கிராம முழுவதும் நேரில் சென்று மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற்றது. அதன்  ஒரு பகுதியாக கும்பகோணம் அருகே உள்ள செம்மங்குடி கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜெயபால், மாவட்டக் குழு உறுப்பி னர் பழனிவேல், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கண்ணன்,  வெங்கடேசன், ரெங்கசாமி உள்ளிட்டோர் மக்களிடம் துண்டு  பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம் செய்தனர்.  திருவாரூர் குடவாசல் தெற்கு ஒன்றியப் பகுதியில் நடைபெற்ற பிரச் சாரத்திற்கு, சிபிஎம் தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.லெனின்  தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. சுந்தரமூர்த்தி காங்கேயம் நகரத்தில் பிரச்சார பயணத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். சிபிஎம் மாவட்டச் செய லாளர் டி.முருகையன் சிறப்புரையாற்றினார். மாவட்டக் குழு  உறுப்பினர்கள் ஆர்.லெட்சுமி, பா.சுகதேவ், மூத்த தோழர்கள் எப்.கெரக்கோரியா, எஸ்.கிருஸ்துவநாதன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உரையாற்றினர். காங்கேய நகரம், மேலப்பாலையூர், துறையூர், மூலங்குடி, புதுக்குடி, வெள்ளமண்டபம், சீதக்கமங்கலம், கண்டிரமாணிக்கம், பிலாவடி, சித்தாடி, இராதாநல்லூர், செருககளத்தூர் உள்ளிட்ட பல்வேறு மையங்களில் மக்களை  சந்தித்து பிரச்சாரம் குறித்த துண்டறிக்கை வழங்கப்பட்டது. திருவிடச்சேரி கடைவீதியில் பிரச்சாரம் நிறைவு பெற்றது.  பிரச்சாரத்தில் அந்தந்த பகுதியில் உள்ள ஒன்றியக் குழு  உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், வர்க்க வெகுஜன  நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கட்சியின் மன்னார்குடி ஒன்றியக் குழு சார்பாக கூத்தா நல்லூர், லக்ஷ்மாங்குடி மற்றும் உள்  கிராமங்களில் மக்கள்  சந்திப்பு நடைபயண பிரச்சார இயக்கம் நடைபெற்றது. கூத்தாநல்லூர் பேருந்து நிலையத்தில் ஒன்றியச் செயலா ளர் கே.ஜெயபால் தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தை,  மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் துவக்கி வைத்து  உரையாற்றினார்.  பின்னர் கூத்தாநல்லூர் காவல் நிலையம் லட்சுமாங்குடி பாலம், இந்தியன் வங்கி பாய்கார தெரு, ரேடியோ பார்க்  உள்ளிட்ட இடங்களில் நடைபயண பிரச்சாரம் துவங்கி, பாண்டுகுடி பாலத்தில் நிறைவடைந்தது. இந்த இயக்கத்தில்  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.தமிழ்மணி, கே.என். ராதா, மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.கே.வேலவன், விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர். 50 பெண்கள் உள்பட 150 பேர் பிரச்சார நடைபயணத்தில் கலந்து கொண்டனர்.  புதுக்கோட்டை அன்னவாசல் ஒன்றியத்தில் புதன்கிழமை நடைபெற்ற  பிரச்சாரத்திற்கு கட்சியின் அன்னவாசல் ஒன்றியச் செயலா ளர் எஸ்.ரகுபதி தலைமை வகித்தார். பிரச்சாரத்தை தொடங்கி  வைத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம் பேசி னார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் துரை.நாராயணன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.சுப்பையா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.நட ராஜன், ஏ.தேவராஜன், கே.பிரசாத், சி.ஆறுமுகம், எஸ்.நாக ராஜன், எம்.ஜோஷி உள்ளிட்டோர் பேசினர். அன்னவாசல் ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்களில் இந்த மக்கள் சந்திப்பு  பிரச்சாரம் நடைபெற்றது. மயிலாடுதுறை மயிலாடுதுறை நகரப் பகுதிகளில், சிபிஎம் நகர பொறுப்பு  செயலாளர் ஏ.ஆர்.விஜய் தலைமையில் அண்ணாசிலை, கிட்டப்பா தெரு, கருப்பண்ணசாமி கோவில் தெரு, சபாநாய கர் தெரு, பூக்கடை தெரு, கூறைநாடு, கேணிக்கரை, சின்னக் கடைவீதி உள்ளிட்ட நகரப் பகுதிகள் முழுவதும் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்க நடைபயணம் நடைபெற்று வரு கிறது. கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், ப.மாரியப்பன், டி.சிம்சன், ஜி.வெண்ணிலா, டி.ஜி.ரவி, அமுல் காஸ்ட்ரோ ஆகியோர் உரையாற்றினர். நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வடக்கு ஒன்றியம்  வடகரை ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத் திற்கு சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பாண்டியன் தலைமை வகித்தார். நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரி முத்து, கீழ்வேளூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் என்.எம். அபுபக்கர் உள்ளிட்டோர் உரையாற்றினர்.  அரியலூர் அரியலூர் மாவட்டம் அணைக்குடம் பேருந்து நிறுத்தத் தில் இருசக்கர வாகன பிரச்சார பயணம்  தா.பழூர் ஒன்றியச்  செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடை பெற்றது. பிரச்சார பயணத்தை சிபிஎம் மாநிலக் குழு உறுப்பி னர் சின்னை.பாண்டியன் தொடங்கி வைத்தார்.  கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.பரமசிவம், டிஅம்பிகா  ஆகியோர் உரையாற்றினர். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வி.லெட்சுமி, எஸ்.உத்திராபதி, டி.ராமமூர்த்தி, வி.குமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.  தா.பழுரில் பொதுக் கழிப்பறை வசதி செய்து தர வேண் டும். அரசு மகளிர் கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். ரேசன் கடையில் கருவிழி வைத்து செய்யப்படும் முறையை  நிறுத்தி, பழைய முறையை செயல்படுத்த வேண்டும். சுத்த மல்லி நீர்த்தேக்கத்திலிருந்து தா.பழூர் வாய்க்காலை வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும்.  கும்பகோணம் முதல் விக்கிரமங்கலம் வரை நகரப் பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும். தா.பழூர் ஒன்றியத் தில் அரசு புறம்போக்கு, தரிசு புறம்போக்கு, கோயில் நிலங்க ளில் குடியிருப்போருக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த வாகன பிரச்சாரம் நடை பெற்றது. சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன்  அணைக்குடம் கிராம பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து இருசக்கர வாகன பிரச்சாரம் அணைக்குடத்தில் தொடங்கி, சிலால் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட முக்கிய கிராமங்கள் வழியாக தா.பழூர் கடைவீதியில் முடிவடைந்தது. பிரச்சாரத்தில் சிபிஎம் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுமக்கள் 50-க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் பொது மக்களிடமிருந்து குடிமனை பட்டா,  கோயில் இடங்களில் குடியிருப்போருக்கான பட்டா கோரும்  மனுக்களை பெற்றுக் கொண்டு தா.பழூர் கடைவீதியில் பிரச்சாரப் பயணத்தை நிறைவு செய்தார். பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பேருந்து நிலை யம் முன்பு துவங்கிய பிரச்சார இயக்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேப்பந்தட்டை ஒன்றியச் செயலா ளர் கே.எம்.சக்திவேல் தலைமை வகித்தார்.  கோரிக்கைகள் குறித்து மாவட்டச் செயலாளர் ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.கே ராஜேந்திரன், மாவட்டக்  குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர். மாநிலக் குழு உறுப்பினர் சாமி.நடராஜன் பிரச்சார இயக் கத்தை துவக்கி வைத்து கோரிக்கைகளை விளக்கி உரை யாற்றினார். வேப்பந்தட்டை ஒன்றிய பகுதியில் பட்டா இல்லாமல் வாழும் மக்களை கணக்கெடுத்து பட்டா வழங்கிட வேண்டும்.  சின்னமுட்லு அணையை மறு ஆய்வுக்கு உட்படுத்தி நடை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன. பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி, இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.