மதுரை, பிப்.22- மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பேரூ ராட்சி 4-ஆவது வார் டில் திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம். செல்வி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் ம.செல்வி 2,90 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இந்திராதேவி 120 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி யடைந்தார்.
ஏ.சந்தனமாரி வெற்றி
விருதுநகர் மாவட்டம், மம்சா புரம் பேரூராட்சி 4- ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பா ளர் ஏ.சந்தனமாரி வெற்றிபெற்றார். இதற்கான சான்றி தழை தேர்தல் அதிகாரி வழங்கினார்.வெற்றி பெற்ற சந்தனமாரிக்கு சிபிஎம் ஒன்றிய செயலாளர் சசிகுமார், கமிட்டி உறுப்பினர் பெருமாள் மற்றும் கட்சி யினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.