tamilnadu

img

இலங்கைக்கு அரிசி கொள்முதல் அரசாணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

சென்னை,மே 12-   இலங்கைக்கு வழங்குவதற்காக 40  ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல்  செய்ய ஒப்புதல் அளித்த அரசாணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு வழங்குவதற்காக 40 ஆயிரம் டன் அரிசி கொள்முதல் செய்ய அரசு முடிவெ டுத்துள்ளதாக சட்டமன்றத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அரிசி அதிக விலைக்கு வாங்கப்படுவதாக கூறி, திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை கிராமத்தைச் சேர்ந்த ஜெயசங்கர், சென்னை உயர்நீதிமன்ற பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஒரு கிலோ அரிசி 33 ரூபாய் 50 காசுகள் என்ற அடிப்படையில் 40  ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல்  செய்ய 134 கோடி ரூபாயை ஒதுக்கி அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இந்திய உணவு கழகம் ஒரு கிலோ அரிசியை 20 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்கிறது. அங்கு இருந்து அரிசி கொள்முதல் செய்யும் பட்சத்தில் 54 கோடி ரூபாய் மிச்சமாகும். அரிசி கொள்முதல் செய்வது குறித்து லஞ்ச  ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும் .அரிசி கொள்முதலுக்கு ஒப்புதல் அளித்து பிறப்பித்த அரசா ணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர்   கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமி நாதன், செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் ஒன்றிய அரசின் அனுமதியுடன் தான் அரிசி அனுப்பப்படுகிறது. அவசர நிலை நேரங்களில் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் வெளிப்படைத்தன்மை ஆகிய விஷயங்களில்  விலக்களிக்க சட்டத்தில் இடமுள்ளது. என்று கூறினார். அரசுத்தரப்பு வாதத்தை ஏற்றுக்கொணட நீதிபதிகள், வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.