tamilnadu

சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்-தலைவர்கள் வாழ்த்து

சென்னை, ஏப்.2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநிலக்குழுச் செய லாளராக மீண்டும் தேர்வு செய்யப் பட்டுள்ள கே. பாலகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள னர். மார்க்சிஸ்ட் கட்சியின் 23ஆவது மாநில மாநாடு மார்ச் 30-31, ஏப்.1 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் மீண்டும் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனையொட்டி தனது சுட்டுரை யில் (டிவிட்டர்) திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தமிழ்நாடு மாநிலக்குழுச் செயலாள ராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள தோழர் கே.பாலகிருஷ்ணனுக்கு நெஞ் சார்ந்த வாழ்த்துகள்! கல்லூரி பரு வம்தொட்டே அரசியல் களத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பொது வுடைமைப் போராளியான அவரது தொண்டு சிறக்க வாழ்த்தி மகிழ்கி றேன்” என குறிப்பிட்டுள்ளார்.

கி.வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீர மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கே. பாலகிருஷ்ணன் இரண்டாவது முறையாக செயலாளராக தேர்ந்தெ டுக்கப்பட்ட செய்தி மகிழ்ச்சியளிக்கி றது. கடும் உழைப்பாளியாகிய, அவரது அயராத தொண்டறத்திற்குக் கிடைத்த அங்கீகாரம் இது. மதவெறி, சாதிவெறி தீவிரமாக பரவிடும் இந்தக் கால கட்டத்தில் அவற்றை எதிர்க்க இவரது தலைமை பெரிதும் பயன்படும் என்று நம்பி நமது வாழ்த்துகளைத் தெரி வித்துக் கொள்கிறோம் என்று குறிப் பிட்டுள்ளார்.

தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள தோழர் கே. பாலகிருஷ்ணனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கி றேன். இடதுசாரிகள் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு விசிக உற்றத் துணை யிருப்போம்” என்று தனது சுட்டுரை யில் தெரிவித்துள்ளார்.

கனிமொழி

கே.பாலகிருஷ்ணன் மற்றும் புதிய மாநில செயற்குழு உறுப்பி னர்கள் உள்ளிட்ட அனைத்து பிரதிநிதி களுக்கும் எனது வாழ்த்துகள். மக்க ளின் சமூக - பொருளாதார விடுத லைக்கான பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என திமுக மகளிரணி செயலாளர் கவிஞர் கனிமொழி எம்.பி., சுட்டுரையில் தெரிவித்துள்ளார். விசிக துணைப் பொதுச் செயலா ளர் வன்னியரசு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உ.பல ராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச முன்னாள் செயலா ளர் விஸ்வநாதன் உள்ளிட்ட பலரும் அலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

கே.பாலகிருஷ்ணன் நன்றி

முதலமைச்சரின் சுட்டுரையை மேற்கோள்காட்டி, தமிழ்நாடு முதல மைச்சரின் வாழ்த்துச் செய்தி மகிழ்ச்சி யளிக்கிறது. தமிழ் நாட்டின் உரிமை களை பாதுகாக்க, மாநிலங்களின்  உரிமை காக்க, ஒற்றை ஆட்சிக்கு எதிராக இணைந்து செயல்படுவோம். மக்களிடையே நல்லிணக்கம் காப்போம், வெறுப்பு அரசியல் சக்திகளை தனிமைப்படுத்துவோம் என்று கே.பாலகிருஷ்ணன் தனது சுட்டுரையில் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் எஸ்.திருநா வுக்கரசர், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, பால பிரஜாபதி அடிகளார் இயக்குநர் கே.ராஜூ முருகன், முன்னாள் எம்எல்ஏ அபுபக்கர், மனிதநேய மக்கள் கட்சியின் காஜாகனி உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.