tamilnadu

img

சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலை கோரி மாநாடு

சென்னை, ஜூன் 15 - சமூக பாதுகாப்புடன் கூடிய வேலை கேட்டு ஆக.1 அன்று சென்னை யில் சிறப்பு மாநாடு நடைபெற வுள்ளது. வர்க்க, வெகுஜன அமைப்புகள், தொழிற்சங்கங்கள் இணைந்து ‘சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைக் கான இயக்கம்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பு நடத்த உள்ள சிறப்பு மாநாட்டிற்கான  வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் புதனன்று (ஜூன் 14) கிண்டியில் நடைபெற்றது. ஆலவிதை இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், இயக்கத்தின் ஒருங் கிணைப்பாளருமான பெ.சண்முகம் பேசுகையில், “ வேலையின்மை பிரச்சனை முதன்மையானதாக மாறியுள்ளது.  பெரு முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு ஆதரவாக ஒன்றிய மோடி அரசு செயல்படுகிறது. நவீன தாராளமயத்தின் அனைத்து அம்சங்களும் தமிழகம் உள்ளிட்ட  மாநிலங்களில் அமல்படுத்தப் படுகிறது. கவுரவமான வேலை; ஊதி யம் புறந்தள்ளப்படுகிறது. நவீன தாராளமய கொள்கை அமலாக்கத் தினால் வேலையின்மை அதிகரிக்கி றது. இதற்கெதிராக மாற்றுக் கொள் கையை முன்வைத்து நடைபெறும் இந்த மாநாட்டில் கேரள நிதிய மைச்சர் கே.என்.பாலகோபால் பங்கேற்கிறார். இதனையொட்டி பிரசுரம் வெளியிடப்பட உள்ளது. இந்த மாநாடு தமிழகத்தில் பெரும் தாக் கத்தை ஏற்படுத்தும். ஆலவிதை போன்ற இந்த இயக்கம் விருட்சமாக வளரும்” என்றார்.

அடிப்படை பிரச்சனை

மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் பேசுகையில், “வேலையில்லா பெரும் பட்டா ளத்தை முதலாளித்துவம் வைத்திருக் கும் என்றார் மார்க்ஸ். அது நடை முறையில் உள்ளது. நிலக்குவியலை தகர்த்தால்தான் மக்களின் வருமா னம் உயரும். புதிய நிலைமைகளை உள்ளடக்கி நிலச்சீர்திருத்த கோரிக் கையை வலுவாக எழுப்புவோம்” என்றார். “வேலையின்மை இந்தியாவின் அடிப்படை பிரச்சனையாக உள்ளது.  இதை பொதுத் தளத்திலிருந்து மறக் கடித்து பின்னுக்கு தள்ளப்படுகிறது. ஊடங்களில் விவாதிக்காமல் திட்ட மிட்டு மறைக்கப்படுகிறது. வேலை யின்மையோடு இணைந்து உழைப்புச் சுரண்டல் கொடூரமாக நடந்து வருகிறது. ஒன்றிய அரசின் கொள்கையால் முதலாளித்துவம் அசூர வளர்ச்சி  அடைந்து வருகிறது.

முதலாளித்து வத்தால் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரிக்கும்; வேலையின்மையும், உழைப்புச் சுரண்டலும் மேலும்மேலும் அதிகரிக்கும். முதலாளித்துவத்தால் தவிர்க்க முடியாத வகையில் வேலை யின்மையும், உழைப்புச் சுரண்டலும் உள்ளது. இதன் வேகத்தை கட்டுப்படுத்தும் வேகத்தடையாக மக்கள் இயக்கங்கள்  உள்ளன. இந்த தடை இல்லாவிடில் இந்திய அமைப்பு கொடூரமாக மாறிவிடும். இடதுசாரி மாற்றுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களை திரட்டுவோம். தொடர் மக்கள்  இயக்கத்தின் தொடக்கமாக இந்த மாநாடு நடைபெற உள்ளது” என்றும் அவர் கூறினார். இந்தக் கூட்டத்திற்கு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும்  கழிவுநீரகற்று வாரிய தொழிலாளர்கள் சங்கத் தலைவர் க.பீம்ராவ் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் சு.வெள்ளைச்சாமி மற்றும் இ.பொன்முடி, பா.பால கிருஷ்ணன், ம.விஜயகுமார், சாதிக்  பாட்ஷா (சிஐடியு), ஆர்.துரை, ஜி.செந்தில்குமார் (அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம்), ஏ.முருகானந்தம் (மின் ஊழியர் மத்திய  அமைப்பு), அழகுநம்பி வெல்கின்  (யுனைட்), எம்.சந்திரன் (விவசாயி கள் சங்கம்), எம்.குமார் (மாற்றுத் திறனாளிகள் சங்கம்), சி.எம்.குமார் (தமுஎகச), ம.சித்ரகலா (மாதர் சங்கம்),  எம்.ஆர்.சுரேஷ், தீ.சந்துரு (வாலிபர் சங்கம்), ரா.பாரதி (மாண வர் சங்கம்) உள்ளிட்டோர் பேசினர்.

வரவேற்புக்குழு

தலைவராக க.பீம்ராவ், செயலா ளராக ஜி.செந்தில்குமார், பொருளா ளராக சு.வெள்ளைச்சாமி ஆகி யோரை உள்ளடக்கிய வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது.