மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட ஆர்.ெஜயராமன் (வார்டு 4), பா.விமலா (வார்டு 41), ஆ.பிரியதர்ஷினி (வார்டு 98) மற்றும் ஆவடி மாநகராட்சி 10ஆவது வார்டில் போட்டியிட்ட ஏ.ஜான் ஆகியோர் வெற்றி பெற்றனர்.வெற்றி பெற்ற அனைவரும் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், பி.சம்பத், மாநிலச் செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் ஆகியோரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் பாக்கியம், சரவணதமிழன், ஏ.விஜயகுமார், ஆர்.லோகநாதன், பூபாலன், வே.ஆறுமுகம்,பகுதிச் செயலாளர்கள் ஜி.அன்பழகன் (வில்லிவாக்கம்), கதிர்வேல் (திருவொற்றியூர்), ரவிக்குமார் (ஆர்.கே.நகர்) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.