சென்னை, அக். 26- கோவையில் கடந்த 23ஆம் தேதி அதி காலையில் காரில் எடுத்துச் செல்லப்பட்ட சிலிண்டர் மற்றும் வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் முபின் என்ற வாலி பர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கோவை உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், பொதுவான சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் புதனன்று (அக். 26) ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மேற்படி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், கோவை மாவட்ட த்தில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்க ப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்தும், கோவை மாவட்டத்தில் பாது காப்பினை மேலும் உறுதி செய்திடவும் முத லமைச்சர் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதுபோன்ற சம்பவங்களின் விசாரணை யில், மாநிலம் தாண்டிய பரிமாணங்களும், பன்னாட்டுத் தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால், இந்த வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு அமைப் பிற்கு மாற்றிட ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்து ரைகளை செய்திட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கோவை மாநகரின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்திட கரும்புக் கடை, சுந்தரா புரம், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை உடனடியாக அமைக்கவும், மாநிலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள், சம்பவங்கள் வருங் காலங்களில் நடைபெறாமல் தடுத்திடும் வகையில், காவல்துறையில் ஒரு சிறப்புப் படையை உருவாக்கவும், கோவை உட்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும், மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய முக்கிய பகுதிகளிலும், கூடுதல் நவீன கண்காணிப்புக் கேமராக்களை விரைவில் பொருத்து வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாநிலத்தின் உளவுப் பிரிவில் கூடுதல் காவல்துறை அலுவலர் களை நியமனம் செய்யவும், இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரைப் பற்றியும், அவர்களோடு தொடர்பு வைத்திரு ப்பவர்களைப் பற்றியும் நுண்ணிய தகவல் களை அளிப்போருக்கு தக்க பாதுகாப்பு வழங்கவும், அவர்களை ஊக்குவித்திடவும் முதலமைச்சர் உத்தரவிட்டார். கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு, காவல் துறை கூடுதல் இயக்குநர் (நுண்ணறிவு) சௌ.டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.