tamilnadu

img

மலையேறிச் செல்லும் மரங்கள் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

மலைகளில் மரங்கள் புவி வெப்ப  உயர்வு மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக மேலும்  உயரமான இடங்களுக்குச் செல்கின்  றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. சீனாவின் ஷென்ஷென் (Shenzhen)  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற் கான தென் பிராந்திய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தொலை உணரித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மலைகளின் உயரமான இடங்களி ல் உள்ள மரங்களின் அடர்வை  ஆராய்ந்து இதைக் கண்டுபிடித்துள்ள னர்.

மேல் நோக்கிச் சென்ற  70% மரங்கள்

2000-2010 ஆண்டு காலத்தில் 70% மரங்கள் சராசரியாக ஆண்டிற்கு 1.2 மீட்டர்/4 அடி மேல்நோக்கி நகர்ந்து சென்றுள்ளன என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. இந்த நகர்வு வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிக மாகக் காணப்பட்டது. இப்பகுதியில் மரங்கள் ஆண்டிற்கு சராசரியாக 3.1  மீட்டர் தூரம் மேல் நோக்கி சென்றுள் ளன. என்றாலும் உலகளவில் இந்த  போக்கு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்று ஆய்வாளர்கள் கூறு கின்றனர்.

உலகளாவிய ஆய்வுகள்

உலகில் உள்ள மலைப்பகுதி மரங்களில் ஆய்வாளர்கள் ஒரு மில்லியன் கிலோமீட்டர்/600,20,000 மைல் பரப்பில் உள்ள 2043 மலைப் பகுதிகளை ஆராய்ந்தனர். மரங்கள் அடர்ந்திருந்த காடுகளை வேறு பயன்பாட்டிற்காக மாற்றுவது போன்ற மனிதக் குறுக்கீடுகளால் மரங்க ளின் வரிசை (tree line) நகர்வ துண்டு. ஆனால் இந்த ஆய்வில் மனிதக் குறுக்கீடுகள் நிகழ வாய்ப்பில்  லாத மிக உயரமான இடங்களில் இருக்கும் மலைப்பகுதி மரங்க ளையே ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர். உணர்ச்சிவசப்படும் மரங்கள் இப்போதும் மலைகளில் இருக்  கும் மரங்கள் உயரமான இடங்களுக்கு  நகர்வது அவை காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்ப உயர்விற்கு உணர்ச்சிப்பூர்வமாக பதில் வினை புரிகின்றன என்பதையே காட்டுகிறது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இவ்வாறு மரங்களின் வரிசை மேல் நோக்கி நகர்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றி இன்னும் சரி யாகத் தெரியவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

மரங்கள் அதிகமானால்

இப்போது இருக்கும் அளவை விட வெப்பநிலை உயர்வால் மரங்க ளின் எண்ணிக்கை அதிகரிக்கும். மரங்கள் அதிகமானால் வளி மண்ட லத்தில் கார்பன் டை ஆக்சைடு கூடு தலாக அகற்றப்படும். இது சில வன  உயிரினங்களின் வாழிடப் பரப்பை  விரிவுபடுத்தும். இது போன்ற ஒரு  சில நன்மைகள் இருந்தாலும் மரங்கள் நகர்ந்து மலை மேலேறிச் செல்வதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி மேலும் தீவிரமாக ஆராயப்படவேண்டும் என்று ஆய்வாளர்கல் கூறுகின்றனர். உயிர்ப் பன்மயத்தன்மையின் அடையாளம் இந்த போக்கு தூந்திர (tundra) பிரதேசத்தின் பரப்பைக் குறைக்கும். இது  ஆல்பைன் இனங்கள் அழியும் ஆபத்தை ஏற்படுத்தும். இப்பகுதியை சார்ந்துள்ள பிரதேசங்களின் நீர்  விநியோகத்தை பாதிக்கும். உயர மான இடங்களில் உள்ள மரங்கள் காலநிலை மாற்றத்தினால் உயிர்ப் பன்மயத்தன்மையில் உண்டாகும் தாக்கத்தை அடையாளம் காட்டும் உயிரி காட்டிகள்.

வளங்கள் காப்பாற்றப்பட்டால்

இந்த ஆய்வுக்கட்டுரை உலகளா விய உயிரியல் மாற்றம் (Global change Biology) என்ற ஆய்வித ழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த  ஆய்வு மாறிவரும் சூழலில் உயிர்ப்  பன்மயத்தன்மை, இயற்கை வளங்கள், சூழல் மண்டல தகவ மைப்பு பற்றிய வருங்கால ஆய்வு களுக்கு வழிகாட்டியாக அமையும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். பூமியின் விளிம்பிற்கு விரட்டப்படும் உயிரினங்கள் வெப்ப உயர்வில் இருந்து தப்பிக்க விலங்குகள் குளிர்ந்த பகுதிகளுக்கு இடம்பெயர்வது போல மலைகளில் வாழும் மரங்கள் உயரமான இடங்களுக்கு நகர்ந்து செல்கின்றன. வெப்ப உயர்வை நாம் கட்டுப்படுத்தாவிட்டால் உயிரி னங்கள் பூமியின் விளிம்பிற்கே குடிபெயர்ந்து சென்றுவிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.