புவி வெப்ப உயர்வு பூமி முழுவதும் உள்ள தாவர விலங்கினங்களை பாதித்து வருகிறது. ஆனால் ஐரோப்பிய நாடு களில் பறவைகளை பாதிப்பது புவி வெப்ப உயர்வு மட்டும் இல்லை என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பறவைகளின் குணங் களிலும், வாழ்வியல் முறையிலும் ஏர்படும் மாற்றத்தில் நகரமயமாக்கல் மற்றும் வாழிட இழப்பு ஆகியவை முக்கியப்பங்கு வகிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்லது.
எண்ணிக்கைக் குறைவு
இது பற்றிய ஆய்வறிக்கை நேஷனல் அகா டமி (Proceedings of the National Academy of sciences) என்ற இதழில் வெளி வந்துள்ளது. கடந்த ஒரு சில பத்தாண்டு காலத்தில் புவி வெப்ப உயர்வு சராசரி 57% பறவைகளின் சுபாவ மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது. மிதமிஞ்சிய வெப்பம் 86% பறவைகளில் முட்டை பொரிக்கும் காலத்தைப் பாதித்துள்ளது.
குழந்தைகள் பிறப்பதில்லை
இதனால் குஞ்சுகளின் எண்ணிக்கையில் 37% குறைவு ஏற்பட்டுள்ளது. இது சிப்சாப்ஸ் என்ற பறவையினத்தில் அதிகம் காணப் பட்டது. இவை சாதாரணமாக முட்டையிடத் தேர்ந்தெடுக்கும் காலத்திற்கு 12 நாட்கள் முன்கூட்டியே முட்டையிட தொடங்கின. பத்து நாட்களுக்கு முன்னதாகவே இவை இப்போது முட்டையிடத் தேர்ந்தெடுக்கின்றன.
கார்டன் வாஃப்லர்
கார்டன் வாஃப்லர் (Garden wabler) என்ற பறவையினத்தின் குஞ்சுகள் முட்டையிட்டு பிறக்கும் எண்ணிக்கை முந்தைய கணக்கு களுடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளது. இது இந்த இனப் பறவைகள் இன அழிவிற்கு ஆளாகும் ஆபத்தை அதிகரித்துள்ளது. கடந்த அரை நூற்றாண்டில் யுகே நாட்டில் அதிகம் காணப்படும் கார்டன் வாஃப்லர் பறவைகளில் குஞ்சுகளின் எண்ணிக்கையில் 26% குறைவு ஏற்பட்டுள்ளது. நகரமயமாக்கல் மற்றும் வாழிட இழப்பின் மூலம் இப்பறவைகளின் எண்ணிக்கையில் மட்டும் குறைவு ஏற்படவில்லை. இவை இயல்பாக முட்டையிட்டு குஞ்சு பொரிக்கத் தேர்ந்தெடுக்கும் காலத்திலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. காலம் தப்பிப் பெய்யும் மழை போல, மாதம் மாறி பூக்கும் பூக்கள் போல சூழல் சீரழிவால் இன்று பறவைகள் முட்டை யிட்டு குஞ்சு பொரிப்பதும் தாறுமாறாகி வருகிறது. இது சூழல் சமநிலையை பெரிதும் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்