சேலம், அக்.10- கேரளத்தை போல தமிழ்நாட்டி லும் சுமைப்பணி தொழிலாளர் களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு சுமைப்பணி தொழி லாளர் சம்மேளன மாநில மாநாடு சேலத்தில் அக்.9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மாநிலம் முழுவது மிருந்து பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர். இதில், தமிழகம் முழுவதும் அரசு குடோன்கள், மார்க்கெட் கடைகள், லாரி செட்டுகள் மற்றும் சாலையோ ரங்கள் என சுமார் மூன்று லட்சம் சுமைப்பணி தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். சுமைப்பணி தொழிலாளர்களுக்கு என தனி நல வாரியத்தை கேரளா அரசு உருவாக்கி யுள்ளது. தமிழகத்தில் தொழில் வாரி யான பல நல வாரியங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் கேரள மாநிலத்தில் உள்ளது போல் சுமை பணி தொழிலாளர் என தனிநல வாரியம் தமிழகத்தில் உருவாக்க வேண்டும். மேலும், ஒன்றிய பாஜக அரசு தேசத்தின் பொதுத்துறை சொத்துக் களை தனியார்மயப்படுத்த வெகு வேகமாக செயல்பட்டு வருகிறது. குறிப் பாக மின்துறையில் தனியார்மயத்தை ஈடுபடுத்த வேண்டும் என்ற முறையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மின்சார சட்டத் திருத்த மசோதா 2022ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டும். முறைசாரா தொழி லாளர் நலவாரிய செயல்பாடுகளை சீரமைக்க வேண்டும். தமிழக அரசு மின் கட்டணம், சொத்து வரி உயர்வை கைவிட வேண்டும். பல ஆண்டுகள் போராடிப்பெற்ற 29 தொழிலாளர் நலச்சட்டங்களை ஒன்றிய அரசு நான்கு சட்டத் தொகுப்புகளாக அறி முகம் செய்துள்ளது. இதனால் தொழி லாளர்கள் பெரிய அளவில் பாதிப்பு அடைவார்கள் எனவே தொழிலாளர் சட்டத் திருத்தங்களை கைவிட வேண்டும்.
திருவாரூர் டாஸ்மார்க் குடோ னில் வேலை செய்யும் டெலிவரி தொழி லாளர்களின் வேலையை பறிக்கும் விதமாக ஒப்பந்ததாரர்கள் வெளி ஆட்களை கொண்டு வருவதை கைவிட வேண்டும். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியாக ஏற்றுக்கூலி, இறக்குக் கூலி மற்றும் பிஎப், இஎஸ்ஐ ஆகிய வற்றை முறைப்படுத்துதல் வேண்டும். ரயில்வே கூட்செட் சுமைப்பணி தொழி லாளர்களை இரவு நேரத்தில் பணி செய்ய வற்புறுத்தக் கூடாது உள்ளி ட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு
இதைத்தொடர்ந்து சம்மேளன த்தின் மாநிலத் தலைவராக ஆர். வெங்கடபதி, செயல் தலைவராக எஸ்.குணசேகரன், பொதுச்செயலாளராக ஆர்.அருள்குமார், பொருளாளராக பி.குமார், துணைத் தலைவர்களாக எம். ராஜகோபால், ஏ.பிச்சை முத்து, டி.முருகேசன், எம்.அர்த்தநாரி, ஆர். ராஜன், ஏ.சுடலை காசி, இ.பழனி, கே. கஜேந்திரன், துணைச் செயலாளர் களாக ஆர்.பாரி, ஏ.கோவிந்தன், ஆர். பாண்டி, எம்.எஸ்.பீர்முகமது, எம். ராமன், பி.பொன்ராஜ், ஆர்.சிவ குமார் உட்பட 43 பேர் கொண்ட சம்மே ளனக்குழு தேர்வு செய்யப்பட்டது. முடிவில், மாநாட்டை நிறைவு செய்து சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திருவேட்டை உரையாற்றினார்.