திருச்சிராப்பள்ளி, ஜூன் 24- திருச்சி பெல் சிஐடியு தொழிற்சங்க ஸ்தா பக தலைவர்களில் ஒருவரும், மூத்த தோழரு மான பொன்மாலா (வயது 79) வியாழன் அன்று இரவு மாரடைப்பால் காலமானார். பெல் சிஐடியுவினர், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தோழர் பொன்மாலாவின் உடல் சனிக்கிழமை அன்று திருவெறும்பூர் எழில்நகர், குறிஞ்சி முதல்தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. பொன்மாலாவின் உடலுக்கு பெல் சிஐ டியு பொதுச் செயலாளர் பரமசிவம், துணைத் தலைவர்கள் பிரபு, அருணன், பொருளாளர் இசக்கிமுத்து, செயலாளர் காளிராஜ், அமைப்பு செயலாளர் பெரியசாமி, சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் சிபிஐ புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
முன்ன தாக பெல் சிஐடியுவினர் மலர்வளையம் மற் றும் சிஐடியு கொடி ஏந்தி ஊர்வலமாக வந்த னர். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிபிஎம் மத்தி யக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஸ்ரீதர், மூத்த தோழர் கே.முகமதுஅலி, மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா, பெல் மூத்த தோழர் அ.அன்வர்உசேன், பெல் சிஐடியு சங்க பொதுச்செயலாளர் பரமசிவம், சிபிஎம் எழில்நகர் கிளைசெயலாளர் பன்னீர்செல் வம் ஆகியோர் பேசினர். தோழர் பொன்மாலா கேரளாவில் பிறந்தி ருந்தாலும், தான் வசித்த தமிழகத்தின் கலாச்சாரம், மொழி ஆகியவற்றை கற்றுக் கொண்டு அதை கடைப்பிடித்து ஒரு கம்யூ னிஸ்ட்டாக வாழ்ந்து காட்டியவர். தொழிலா ளர் வர்க்கத்திற்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்த தோழர் பொன்மாலாவை இழந்து நிற்கின்றோம். தொழிற்சங்கத்தை எப்படி வழி நடத்துவது, நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை எப்படி நடத்துவது என்பதற்கு ஆசானாக திகழ்ந்தவர். இவருடைய பல போராட்டங் கள் தொழிலாளர்களின் குடும்பங்களின் முன் னேற்றத்திற்கு உதவியது. அனைத்து தரப்பினரிடமும் எவ்வித பேதமும் இல்லா மல் ஒரே மாதிரியான அணுகுமுறையை கொண்டவர். திருவெறும்பூர் பகுதியில் இளைஞர்கள் கட்சிக்கு வருவதற்கு பால மாக செயல்பட்டவர். ஒரு இளைஞனுக்கு உள்ள துடிப்போடு கடைசி வரை வாழ்ந்த வர். மிகச்சிறந்த எடுத்துகாட்டு, வழிகாட்டி தோழர் பொன்மாலா. அவரை போல் வாழ முயற்சி எடுப்போம் என புகழஞ்சலி செலுத்தி னர். பின்னர் தோழர் பொன்மாலாவின் உடல் அவரது இல்லத்தில் இருந்து அலங்க ரிக்கப்பட்ட வண்டியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு எழில்நகர் மயானத்தில் தக னம் செய்யப்பட்டது.