சின்னாளபட்டி, அக்.20- திண்டுக்கல் மாவட்ட அளவிலான நியோ டிக் எக்ஸ்போ-2022க்கான போட்டிகள் பண்ணை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் மாவட்ட அளவிலான அரசுப் பள்ளிகள் உட்பட 50க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. இதில் 4 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கான போட்டிகள் நடைபெற்றது. நடனப்போட்டி, பாட்டுப் போட்டி, மைமிங் போட்டிகள், மாணவர்களின் தனித்திறமைக்கான போட்டி உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் சிப் பட்டத்தை தட்டிச் சென்றது. பள்ளி மாணவ-மாணவியர்களுக்கான பாராட்டு விழா பள்ளி முதல்வர் திலகம் தலைமையில் நடைபெற்றது. உதவி தலைமை ஆசிரியை வெண்ணிலா முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் எம்.சிவக்குமார் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களை பாராட்டி வாழ்த்தியதோடு வெகுமதிகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி மேலாளர் ஓ.பி.பாரதிராஜா, பள்ளி ஆசிரியைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.