tamilnadu

img

சளைக்காத போராளி கி.வீரமணி

சென்னை,டிச.2- சமூகநீதிப் போர்க்களத்தின் சளைக்காத போராளி தி.க. தலை வர் வீரமணி என தமிழக முதல்வர்  ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி.  வீரமணியின் 89 வது பிறந்த  நாளையொட்டி வியாழனன்று (டிச.2) அவரது இல்லத்துக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கதர் ஆடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். துணை வியார் வீ.மோகனம்மாள் உடனி ருந்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் ்கள் துரைமுருகன், கே.என்.நேரு,  எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் ்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பெரி யார் எனும் பெரும் பல்கலைக்கழ கத்தில் நேரடியாகப் பயின்ற மாண வர். பகுத்தறிவு - சுயமரியாதைப் பாடங்களைப் தெளிவாகப் பயிற்று விக்கும் ஆசிரியர். சமூகநீதிப் போர்க்களத்தின் சளைக்காத போராளி. கலைஞரின் கொள்கை இள வல். நெருக்கடி நிலைக் காலத்து சித்திரவதைகளில் என்னைத் தாங்கிப் பிடித்த சக சிறைவாசி. எந்த நெருக்கடியிலும் தெளிவான கொள்கை வழிக்காட்டிடும் திரா விடப் பேரொளி. தாய்க் கழகமாம் திராவிடர் கழகத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நூறாண்டுகள் கடந்து நலமுடன் வாழ்க. தொண்ட றம் தொடர்ந்திடுக” என்று தெரி வித்துள்ளார்.

;