tamilnadu

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளித்திடுக!

சென்னை,ஜன.12-  தமிழ்நாட்டில் 11 புதிய அரசு மருத்துவக்  கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சியின் வாயிலாக ஜனவரி 12 புதனன்று மாலை திறந்து வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “பல மாநிலங் களில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவி  வரும் நிலையில், தமிழ்நாட்டில் கிராமப்புறங் களிலும் அரசுத் துறைகள் சிறப்பாக சேவை  செய்வதற்கு தமிழ்நாட்டின் மாணவர் சேர்க்கை கொள்கை அடிப்படையாகும். மருத்துவத் துறையில் நாட்டிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க வேண்டும்.  நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். மாணவர் சேர்க்கை தொடர்பான இந்த  கோரிக்கையை ஒன்றிய  அரசு நிறை வேற்றித் தர வேண்டும். தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறைக்கு ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.